தங்கம் குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீனுடன் புஹாரி ஹோட்டல் இயக்குனர், உ.பு.வா. சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜி சந்திப்பு!

சென்னை, ஆகஸ்ட். 15: புஹாரி ஹோட்டல் குழும இயக்குனர், உமறுப் புலவர் வாரிசுகள் சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜியின் மகன் காமில் முகமது திருமண அழைப்பிதழை, தங்கம் குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீனை நேரில் சந்தித்து வழங்கினார், எழுத்தாளர் அன்பழகன் உடன் …

தங்கம் குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீனுடன் புஹாரி ஹோட்டல் இயக்குனர், உ.பு.வா. சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜி சந்திப்பு! Read More

தமிழக பட்ஜெட் மகிழ்ச்சியும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்- எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தின் 2021-22-க்கான திருத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தின் நிதிநிலைக்கு ஏற்ப அனைத்து தரப்பு மக்களும் பலனடையும் வகையில் …

தமிழக பட்ஜெட் மகிழ்ச்சியும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்- எஸ்டிபிஐ Read More

எஸ்.பி வேலுமணி க்கு கோவையில் பிரமாண்ட வரவேற்பு : ஆயிரகணக்கானோர் திரண்டிருந்ததால் பரபரப்பு

அதிமுகவின் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற கொறடாவுமான எஸ். பி. வேலுமணி  வீடு உட்பட அவருக்கு  தொடர்புடைய பல்வேறு இடங்களில் சில நாட்களுக்கு முன்பு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அவர் மீது பல்வேறு …

எஸ்.பி வேலுமணி க்கு கோவையில் பிரமாண்ட வரவேற்பு : ஆயிரகணக்கானோர் திரண்டிருந்ததால் பரபரப்பு Read More

மதுரை ஆதீனம் காலமானார்

மதுரை ஆதீனமாக  292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர் சுவாமிகள் முக்தியடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மதிரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக முடிசூட்டினார். இதற்கு மற்ற மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் மதுரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய …

மதுரை ஆதீனம் காலமானார் Read More

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தீவிர நடவடிக்கை தேவை – சரத்குமார்

நடப்பாண்டு தமிழகத்தின் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு முதன்முறையாக தாக்கல் செய்த காகிதமற்ற டிஜிட்டல் பட்ஜெட்டில், கொரோனா சமயத்தில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகளைசீர்செய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் குறைவாகஇருப்பதாகவே தெரிகிறது. தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைப்பு, சிங்காரச்சென்னை 2.0 திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும்திட்டம், மதுரையில் மெட்ரோ அமைக்க ஆய்வு, தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் டைடல் பூங்கா அமைப்பு, தொல்லியல் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு, சட்டமன்ற தொகுதிமேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு என்பது உள்ளிட்ட சிலவரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், தமிழகத்தின்நிதிநிலையை சீரமைப்பதற்கான செயல்திட்டங்கள் குறித்தமக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றே சொல்லலாம்.  வெள்ளை அறிக்கையில் அரசுப்பேருந்து 1 கி.மீ ஓடினால் ரூ.59நஷ்டம் ஏற்படுகிறது என அறிவித்துவிட்டு, தற்போது பட்ஜெட்டில்1000 பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.623.59 கோடி ஒதுக்கியதுநியாயமாக தெரியவில்லை. நிதிநிலையை சீர்செய்யஇருப்பவர்களிடம் வரி பெற்று இல்லாதவர்களிடம் சேர்ப்போம் எனஅறிவித்து, அதற்கான செயல்திட்டங்களை பட்ஜெட்டில்முன்வைக்காதது ஏன் என புரியவில்லை. ஏற்கெனவே நாங்குநேரிதொழில்நுட்பபூங்கா செயல்படாதநிலையில், மீண்டும்நெல்லையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்என்ற அறிவிப்பு ஏற்புடையதா என்ற கேள்வி எழுகிறது. வெள்ளை அறிக்கைக்கும், பட்ஜெட் தாக்கலுக்கும் இடையேயானவேறுபாடுகளை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். இன்றுதாக்கல் செய்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க சாராம்சங்கள்இருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமான அறிவிப்புகளை வெளியிட்டு இன்னும் சிறப்பாகஅமைத்திருக்கலாம். இருப்பினும், தமிழக அரசு இனி வருங்காலத்தில் விரைவாகஉற்பத்தியை பெருக்கும் வகையிலான சிறந்தசெயல்திட்டங்களையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புவழங்கக்கூடிய திட்டங்களையும் அறிவித்து, தமிழகத்தைவளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென அகிலஇந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.  

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தீவிர நடவடிக்கை தேவை – சரத்குமார் Read More

முன்னாள் அமைச்சர்களுடன்; புஹாரி ஹோட்டல் இயக்குனர், உ.பு.வா. சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜி சந்திப்பு!

சென்னை, ஆகஸ்ட். 12: புஹாரி ஹோட்டல் குழும இயக்குனர், உமறுப் புலவர் வாரிசுகள் சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜியின் மகன் காமில் முகமது திருமண அழைப்பிதழை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, மக்கள் நல்வாழ்வுத்துறை …

முன்னாள் அமைச்சர்களுடன்; புஹாரி ஹோட்டல் இயக்குனர், உ.பு.வா. சங்கத் தலைவர் ருமைஸுதீன் பைஜி சந்திப்பு! Read More

தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி

கொரோனா பரவல் காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தாய்நாடு திரும்பிய தமிழர்களை தொழில் முனைவோர்களாக்க தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து தாய்நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமாகத் தொழில் தொடங்கிட மானியத்துடன் …

தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி Read More

இலங்கை அகதி முகாமிலுள்ள தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஆணையர்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி, மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் ஜெசிந்தாலாசரஸ், இ.ஆ.ப., 11.08.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா.இ.ஆ.ப., உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு …

இலங்கை அகதி முகாமிலுள்ள தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஆணையர் Read More

காவல் கரங்கள் ”  உதவி மையம் மூலம் வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

​சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த 21.04.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  “காவல் கரங்கள்” என்ற அமைப்புஏற்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “காவல் கரங்கள்” மூலம்சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஆதரவில்லாமல் சுற்றிதிரியும் மனநிலை மற்றும் உடல் …

காவல் கரங்கள் ”  உதவி மையம் மூலம் வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். Read More

எழும்பூர் காவலர் மருத்துவமனையில்புதியதாக அமைக்கப்பட்டுள்ள OxyenGenerator -Plant ஐ காவல் துறை தலைமைஇயக்குநர் திறந்து வைத்து வைத்தார்

சென்னை எழும்பூரில் இயங்கி வரும் காவலர்மருத்துவமனையில் காவல் அதிகாரிகள் ஆளினர்கள்மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவசிகிச்சை வழங்கப்படுகிறது. சென்னை பெருநகரில்முன்களப் பணியாளர்களாக பணி செய்துவரும்காவலர்களின் நலனுக்காக   சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., முயற்சியின் பேரில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்ட காவலர்கள் அவர்தம் குடும்பத்தினர்மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக காவலர்மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாகமாற்றப்பட்டு 75 படுக்கை வசதிகளுடன்  ஆக்சிஜன்செறிவூட்டிகளும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில்உள்ளது. மேலும் காவலர் குடும்பத்தைச் சேர்ந்தகொரோனா நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைவசதிகளும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது மெட்ராஸ் ரோட்டரி கிளப் நிர்வாகத்தினர் உதவியுடன் எழும்பூர் காவலர் மருத்துவமனையில்Oxygen-Plant புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழககாவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு, இ.கா. இன்று(11.08.2021) புதிதாக அமைக்கப்பட்ட Oxygen Generator Plantஐ திறந்து வைத்து பார்வையிட்டார். இதன் மூலம்காவலர் மருத்துவமனையில் உள்ள 75 படுக்கைகளில்சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றிஆக்சிஜன் கிடைக்கும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் டாக்டர்.லோகநாதன், இ.கா.ப,, எழும்பூர் காவல் மருத்துவமனை தலைமைமருத்துவர் திரு.B.சுந்தர்ராஜ், மெட்ராஸ் ரோட்டரி கிளப்President திரு.M.சீனிவாசராவ்,  மெட்ராஸ் ரோட்டரிகிளப் உறுப்பினர் டாக்டர்.வசுதா மற்றும் காவல்அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

எழும்பூர் காவலர் மருத்துவமனையில்புதியதாக அமைக்கப்பட்டுள்ள OxyenGenerator -Plant ஐ காவல் துறை தலைமைஇயக்குநர் திறந்து வைத்து வைத்தார் Read More