“நூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின்படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை” – முதல்வர் மு.க.ஸ்டாலின்புகழாரம்

15.06.2021, செவ்வாய்க்கிழமை, மாலை 6 மணிக்கு, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ளமுதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டுநிறைவைக் (1921-2021)கொண்டாடும் ‘ஜானகிராமம்‘ என்ற நூலைவெளியிட்டார். அப்போது முதல்வர், “தமிழின்தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை. அவரது படைப்புகள்குறித்துப் பல்வேறுதுறையைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட இந்நூலைவெளியிடுவதில் பெருமையடைகிறேன். தி.ஜானகிராமன்நூற்றாண்டு விழாவை முன்னெடுக்கும் அனைவர்க்கும்எனது நன்றிகள்“ என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடிக்குஅருகிலுள்ள ‘தேவங்குடி’ என்ற ஒரு சிறிய கிராமத்தில், தியாகராஜ சாஸ்திரி – நாகலட்சுமி ஆகியோரின்இரண்டாம் மகனாக, 28.06.1921இல்பிறந்த தி.ஜானகிராமன், தமிழின் மகத்தானகலைஞர்களுள் ஒருவர். தி.ஜானகிராமன் மறைந்து(18.11.1982) முப்பத்தொன்பது ஆண்டுகளாகிவிட்டபிறகும், நவீனத் தமிழிலக்கியத்தில் அவர் புகழ்இன்றும் ஓங்கியே இருக்கிறது. அவருடையபுனைகதைகள், தமிழ் வாசகர்களால் இன்றும் விரும்பிவாசிக்கப்படுகின்றன. அகில இந்திய வானொலியின்கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றிஓய்வுபெற்ற தி.ஜானகிராமன், தஞ்சாவூர் மாவட்டமக்களின் வாழ்வியலைக் கலைத்திறத்துடன் தம்படைப்புகளில் பதிவுசெய்த ஒரு முன்னோடிஎழுத்தாளராவார். அவர் எழுத்தில் காவிரியும் இசையும்தஞ்சை மண்ணின் இயற்கை வளமும் டெல்டாமனிதர்களின் வாழ்வியல் கோலங்களும் நுட்பமாகப்பதிவுபெற்றுள்ளன. சாகித்திய அகாதமிவிருது (1979) பெற்ற அமரர் தி.ஜானகிராமனின்(28.06.2021) நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும்நோக்கில், தி.ஜா. ஆய்வாளர் கல்யாணராமன், பல்வேறுஎழுத்தாளர்களிடமிருந்து தி.ஜானகிராமனின்படைப்புகளைப் பற்றிய (102) கட்டுரைகளைப்பெற்று, ‘ஜானகிராமம்‘ என்றதலைப்பில், 1032 பக்கங்களில் ஒரு பெருநூலைத்தொகுத்துள்ளார். இந்நூலைக் ‘காலச்சுவடு‘ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.15.06.2021 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குமுதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்வெளியிட, ‘ஜானகிராமம்‘ நூலின் முதல் பிரதியைத்தி.ஜானகிராமனின் மகள் உமாசங்கரியின் சார்பாக, ‘விப்ராஸ் ஆட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்திருமதி கெஜலக்ஷ்மி ரகு பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், இந்நூலின்தொகுப்பாசிரியர் கல்யாணராமன், நந்தனம் கல்லூரித்தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சீதாபதி ரகு, கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தா.அ.சிரிஷாராமன், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

“நூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின்படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை” – முதல்வர் மு.க.ஸ்டாலின்புகழாரம் Read More

கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட அளவில் சிறப்புக் குழுக்கள் அமைக்கவேண்டும் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை

மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7வது தெருவை சேர்ந்த முஹம்மது அலி (37) என்பவர் கந்துவட்டி தொல்லை காரணமாகக் காவல்துறையினருக்கு வேண்டுகோள் வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் உலுக்கி உள்ளது.  தமிழகத்தில் கந்து வட்டி காரணமாகத் …

கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட அளவில் சிறப்புக் குழுக்கள் அமைக்கவேண்டும் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை Read More

சொன்னதோடு சொல்லாததையும் செய்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார் ரவீந்தர் சந்திரசேகர்

கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ என்றொரு திரைப்படத்தை காண நேரிட்டது. தனியறை இருளில் படம் பல கேள்விகளையும் சங்கடங்களையும் மனதிற்குள் ஏற்படுத்திக் கொண்டே ஓடியது. பெண் காவலர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான, மன ரீதியான சிக்கல்களை முகத்தில் …

சொன்னதோடு சொல்லாததையும் செய்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார் ரவீந்தர் சந்திரசேகர் Read More

மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து 17-ஆம் தேதி பா.ம.க. போராட்டம் அறிவித்துள்ளது

தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்கள் நலனுக்கான அரசு அல்ல… மது ஆலைகளின் நலனுக்கான அரசு தான் என்பது நேற்று நிரூபிக்கப்பட்டு விட்டது. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களின் குடும்பங்களில் மீதமுள்ள உடமைகளையும் பறிக்கும் …

மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து 17-ஆம் தேதி பா.ம.க. போராட்டம் அறிவித்துள்ளது Read More

கொரோனா முடக்க இழப்பை ஈடுகட்ட 20% விலையுயர்த்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பெருந்தொற்று பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்களும் பாதிப்படைந்திருந்த நிலையில், கட்டுமானத் தொழில் மட்டுமே மக்களுக்கு ஓரளவு வாழ்வாதாரத்தை வழங்கி வந்தது. இந்த சூழலில் கட்டுமான …

கொரோனா முடக்க இழப்பை ஈடுகட்ட 20% விலையுயர்த்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள் Read More

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதே தவிர முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பானவணக்கம். உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாகமேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா என்றபெருந்தொற்று ஒரளவு கட்டுக்குள் வந்திருக்கிறதுஎன்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரு நாளைக்குதொற்றால் பாதிக்கப்படுபவர்கள் 36,000 ஆகஇருந்தார்கள். இது 50,000 ஆகும் என்றுமருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அரசு எடுத்தபல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை15,000-க்கும் கீழ் குறைந்துகொண்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின்எண்ணிக்கை மிக விரைவாக குறைந்துகொண்டேவருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள்இல்லை,  ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்காலியாக இல்லை என்பது மாதிரியான நிலைமைஇப்போது இல்லை. கட்டளை மையம் என்ற வார்ரூமுக்கு உதவிகள் கேட்டு வருகின்ற தொலைபேசிஅழைப்புகளும் குறைந்துவிட்டது.தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகிடைக்கக்கூடிய நிலைமையை உங்களுக்கான இந்தஅரசு உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாடு அரசுபல்வேறு முனைகளில் எடுத்த முயற்சிகளின்காரணமாகத்தான் இரண்டு வாரக் காலத்தில்அனைத்தும் கட்டுக்குள் வந்திருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறசங்கிலியை முதலில் உடைத்தாக வேண்டும்.அதற்காகத்தான் மக்கள் நடமாட்டத்தைக்கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்தோம்.ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முறையாகவும், முழுமையாகவும் கடைபிடித்ததால்தான், இந்தஅளவிற்குக் கொரோனா பரவல் கட்டுக்குள்வந்திருக்கிறது. எனவே, விதிமுறைகளைப் பின்பற்றிநடந்துகொண்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் எனதுநெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஊரடங்கை இன்னும் ஒருவாரக் காலத்திற்குநீட்டித்து அறிவியுங்கள் என்று பொதுமக்களிடமிருந்தே கோரிக்கை வந்தது. அரசும் மக்களும் ஒரே மாதிரியாக சிந்திப்பதுமட்டுமல்ல, மக்களுடைய எண்ணங்களைத்தான் அரசுசெயல்படுத்தி வருகிறது என்பதற்கு இதைவிட வேறுஆதாரம் தேவையில்லை. என்னதான் அரசாங்கம்கட்டுப்பாடுகளை விதித்தாலும், அதை மக்கள்பின்பற்றினால்தான் முழு வெற்றி சாத்தியம் ஆகும்.விதிகளை மக்கள் பின்பற்றுவதால்தான் தொற்றுபரவல் குறைந்தது. அதேபோன்ற எச்சரிக்கைஉணர்வோடு மக்கள் தொடர்ந்து இருக்கவேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன். கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்று தான்சொன்னேனே தவிர, முழுமையாக அதற்குமுற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்றுசொல்லவில்லை. மக்கள் மிகமிக எச்சரிக்கையாகஇருக்க வேண்டும். அரசாங்கம் எடுக்கின்றநடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அரசும், மக்களுடைய நெருக்கடியைஉணர்ந்திருக்கின்ற காரணத்தினால்தான் கொரோனாதொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் சிலதளர்வுகளை கொடுத்திருக்கிறோம். சிலகட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம்.

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதே தவிர முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின் Read More

போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறை முடங்கும் அபாயம் – சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலுக்கு சு. வெங்கடேசன் எம் பி எழுதியுள்ள கடிதத்தின் விபரம். இந்தியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டி எழுப்பும் துறையாக கல்வெட்டு ஆய்வுத்துறை இருக்கிறது. கல்வெட்டு ஆய்வு இல்லாமல் இந்திய வரலாற்றை நினைத்துப் பார்க்கவே முடியாது. …

போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறை முடங்கும் அபாயம் – சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் Read More

நுண்கிருமிகளுக்கு எதிரான காரணிகள் பூசப்பட்ட முகக் கவசங்கள்: புனேவைச் சேர்ந்த புதுமை நிறுவனம் உருவாக்கியது

முப்பரிமாண அச்சிடுதல் மற்றும் மருந்துத்துறையின் ஒருங்கிணைப்பில் நுண்கிருமித் தொற்றுக்களை அழிக்கும் புது விதமான முகக் கவசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புனேவில் உள்ள தின்கர் டெக்னாலஜிஸ் இந்தியா என்ற புதுமை நிறுவனம், வைரசைட்ஸ் (virucides) என்று அழைக்கப்படும் நுண்கிருமிகளுக்கு எதிரான காரணிகள் பூசப்பட்ட முகக் கவசங்களைத் தயாரித்துள்ளது. கொவிட்-19 தொற்றுக்கு …

நுண்கிருமிகளுக்கு எதிரான காரணிகள் பூசப்பட்ட முகக் கவசங்கள்: புனேவைச் சேர்ந்த புதுமை நிறுவனம் உருவாக்கியது Read More

பல்லாண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய மு.க.ஸ்டாலினிடம் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை

மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம்! ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தங்களுக்கு, எங்கள் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில்  நீண்ட காலம்  சிறையில்  இருப்பவர்களை  விடுதலை செய்ய, இந்த கூட்டு மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கிறோம். 1. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் …

பல்லாண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய மு.க.ஸ்டாலினிடம் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை Read More

முதன்முறையாக பீகாரிலிருந்து இங்கிலாந்திற்கு ஜர்தாலு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது

கிழக்கு பிராந்தியத்தின் வேளாண் ஏற்றுமதிகளுக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் விதமாக, புவியியல் குறியீட்டு சான்றிதழ் பெற்ற ஜர்தாலு மாம்பழங்கள் பிகாரில் இருந்து இங்கிலாந்துக்கு வர்த்தக ரீதியில் முதல் முறையாக இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது.  லக்னோவில் உள்ள அபேடாவின் பேக்கிங் மையத்தில் இருந்து பிகார் அரசு, இந்திய …

முதன்முறையாக பீகாரிலிருந்து இங்கிலாந்திற்கு ஜர்தாலு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது Read More