மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முன்னேற்றக் கழகம் போராட்டம் அறுவிப்பு

கொரானாவின்கோரத்தாண்டவத்தால் பல இன்னுயிர்களைகடைநிலை குடிமகன் முதல் பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், நீதித்துறை உள்ளிட்ட ஏனையபிற அரசுத்துறைகளைச்சேர்ந்த உயர் அதிகாரிகள் வரைக்கும் உயிர்பலி ஏற்பட்டு நிறைய பேர்சொல்லொண்ணா துயரத்திலும், துக்கத்திலும், மிகுந்த மன மற்றும் பண கஷ்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். டீக்கடை கூட திறக்காத இந்த சூழ்நிலையில்  டாஸ்மாக் கடை திறப்பு என்ற அறிவிப்பு என்பது கடைநிலை குடிமகனின் குடும்பம்முதல் காவல்துறையினரின் குடும்பம் வரை  அனைத்து சமூக மக்களும் பல்வேறு தேவையில்லா அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்படும் அபாய சூழ்நிலைய உருவாக்கியுள்ளது. டாஸ்மாக்கின் போதையா? (இல்லை) கோயில்களின் கீதையா? என்ற தலைப்பில் மொட்டை போட்டு மற்றும் பட்டை அடித்து கையில் நீதிதேவதையின் தராசை ஏந்தி திமுக அரசிடம் நியாயம் கேட்டு  டாஸ்மாக் கடை திறப்பு அறிவிப்பை உடனே திரும்பிப் பெற வேண்டும் அல்லது வருகிற14.06.2021 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட/பிராத்தனை செய்வதற்கும் அனுமதி வழங்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எங்களின் இந்த நூதன போராட்டம் தமிழகம் முழுவதும் வருகிற 15.06.2021 அன்று நடத்துகிறோம். சென்னையில் எனது தலைமையில்  அருள்மிகு  பார்த்தசாரதி திருக்கோயில் குளம்அருகே, திருவல்லிக்கேணியில் நடைபெறஉள்ளது. இந்த நூதன அறப்போராட்டமானது 144 தடைஉத்தரவிற்கு உட்பட்டு, மத்திய மாநில அரசுகளின் கோரான வழிமுறைகளை பின்பற்றியும், சமூகஇடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர். எஸ் கே சுவாமி வழக்கறிஞர் மற்றும் தலைவர் தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் 

மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முன்னேற்றக் கழகம் போராட்டம் அறுவிப்பு Read More

பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியதென்கிறார் பெ. மணியரசன்

சாட்டை” வலையொளி ஊடகவியலாளர் துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட 4 பேர் மீது பிணையில் வர …

பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியதென்கிறார் பெ. மணியரசன் Read More

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது

கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின் போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்படுவதை டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண் வீடியோ எடுத்தார். அப்போது அவருக்கு 17 வயது. டார்னெல்லா ஃபிரேசியர் …

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது Read More

அரிய வகை நோய்க்கு சிகிச்சை அளிக்க சமூக வலைதளங்கள் மூலம் ரூ.16 கோடி திரட்டி மகன் உயிரை காப்பாற்றிய பெற்றோர்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் யோகேஷ் குப்தா. இவர் ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி ரூபல் குப்தா. இவர்களுக்கு அயான்ஷ் (3) என்ற மகன் உள்ளான். அயான்ஷ் பிறந்தது முதலே ஸ்பைனல் மஸ்குலர் அட்ரஃபி (எஸ்எம்ஏ) என்ற முதுகு தண்டுவட …

அரிய வகை நோய்க்கு சிகிச்சை அளிக்க சமூக வலைதளங்கள் மூலம் ரூ.16 கோடி திரட்டி மகன் உயிரை காப்பாற்றிய பெற்றோர் Read More

மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு – சீமான்

தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த …

மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு – சீமான் Read More

திருவள்ளுவர் ஓவியத்திற்கு சிறப்புச் செய்க தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

1967 ஜூன் 23 அன்று, தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான அரசு, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணை ஒன்றை வெளியிட்டது. G.O.MS.1.1193.  அதன்படி, ஒவியப் பெருந்தகை, கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களால் வரையப்பட்டு, தமிழகத்தில் அரசியல், மொழி, கலை சார்ந்த …

திருவள்ளுவர் ஓவியத்திற்கு சிறப்புச் செய்க தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள் Read More

ரூ.426 கோடி மதிப்பீட்டில் 3260 குடியிருப்பிற்கான கட்டுமானப் பணிகளைஅமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை-மைலாப்பூர் தொகுதிக்குட்பட்ட நான்கு திட்டப்பகுதிகளில் ரூபாய் 426.19 கோடி  மதிப்பீட்டில் 3260 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் ​தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை-மைலாப்பூர் தொகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், டொம்மிங்குப்பம், ஏகாம்பரம்பிள்ளை மற்றும் முனுசாமிபிள்ளை …

ரூ.426 கோடி மதிப்பீட்டில் 3260 குடியிருப்பிற்கான கட்டுமானப் பணிகளைஅமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார் Read More

வடலூர் வள்ளலார் நிலையத்தை உலகத்தரத்தில் உயர்த்த அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆய்வு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு 11.06.2021 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திருக்கோயிலில்ரூ.8.76 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கேபிள்கார் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்து பணி முன்னேற்றம்குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம்விவரங்களை கேட்டறிந்தார். கேபிள்கார் பணியினை இந்தஆண்டு இறுதிக்குள் முடிக்கும் வகையில் விரைந்துசெயல்படுத்துமாறு அறிவுரை வழங்கினார். இது மட்டுமின்றிவாகன நிறுத்துமிடத்திலிருந்து கேபிள்கார் இயக்கப்படும்இடம் வரை வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள்ஆகியோரது நலனைக் கருத்தில் கொண்டு பேட்டரிவாயிலாக இயங்கும் வாகனங்களை பயன்படுத்துமாறுஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில்நடைபெற்று வரும் சாலைப்பணியினை விரைந்துமுடிக்கவும், திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குசுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தரவும் மற்றும்அப்பகுதியில் உள்ள திருக்குளங்களை புனரமைக்கவும்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போதுஇந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இதர அரசுஅலுவலர்கள் உடனிருந்தனர்.  அதன்பின்னர் மயிலாடுதுறை மாவட்டம்திருவெண்காட்டில் உள்ள இந்து சமயஅறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளஉயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றைநேரில் ஆய்வு செய்து அப்பள்ளிகளுக்குத் தேவையானஉட்கட்டமைப்பு வசதிகளை புனரமைக்கவும் புதிதாககழிப்பிடங்களை கட்டுவதற்கும் தேவையானகருத்துருக்களை இந்து சமய அறநிலையத்துறைஆணையருக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார். மேலும் ஆங்கில வழிக்கல்விஅறிமுகப்படுத்தவும் சுயநிதித் திட்டத்திலிருந்து அரசுஉதவிபெறும் திட்டமாக மாற்றுவதற்கு தேவையானகருத்துருக்களை அனுப்பி வைக்குமாறுமாறும்மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொண்டார்.  இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறைஆணையர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர்கள்உடனிருந்தனர்.  இறுதியாக கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ளதிரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தைமாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்களுடன்சேர்ந்து கூட்டாக ஆய்வு செய்தார்.  அவ்விடத்தில், 2021–ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறக்கையில்அறிவிக்கப்பட்டிருந்த உலகத்தரத்திலான வள்ளலார்சர்வதேச மையத்தினை உருவாக்குவதற்குத் தேவையானதிட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாகவிரிவான கள ஆய்வை மேற்கொண்டார்.இவ்வாய்வின்போது இந்து சமய அறநிலையத்துறைஆணையர், கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.  

வடலூர் வள்ளலார் நிலையத்தை உலகத்தரத்தில் உயர்த்த அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆய்வு Read More

தமிழ்நாடு முழுக்க நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரண உதவி

கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் திரைப்பட மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி,முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர், …

தமிழ்நாடு முழுக்க நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரண உதவி Read More

வங்கிக்கடன் திரும்ப பெற கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் – சரத்குமார்

கொரோனாவால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அமல்படுத்தியிருக்கக்கூடிய ஊரடங்கை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றால், பொருளாதார அடிப்படையில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவும், தொழில் இல்லாமல், வணிகம் இல்லாமல், வியாபாரம் இல்லாமல்  மக்கள் வேதனையில் உழன்று வாடும் உணர்வை புரிந்திருப்பார்கள். வேலைவாய்ப்பு இல்லாமல், வருமானமில்லாமல் மக்களின் வாழ்வாதாரம் …

வங்கிக்கடன் திரும்ப பெற கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் – சரத்குமார் Read More