யாருடைய பணம் அது? ஊடக விவாதத்தில் பிடிஆரின் கேள்வி – கூகுளில் வேக வேகமாக தேடிய வடஇந்தியர்கள்

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஊடக விவாதம் ஒன்று, இணையம் முழுக்க வைரலாகிக் கொண்டு இருக்கிறது. இதையடுத்து வடஇந்தியர்கள் பலர் பிடிஆர் குறித்து இணையத்தில் தேடி உள்ளனர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலானது. …

யாருடைய பணம் அது? ஊடக விவாதத்தில் பிடிஆரின் கேள்வி – கூகுளில் வேக வேகமாக தேடிய வடஇந்தியர்கள் Read More

டிஜிட்டல் இறையாண்மையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறது இந்திய அரசு

இந்தியா ஒருபோதும் டிஜிட்டல் இறையாண்மை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  டிவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் புதிய டிஜிட்டல் கொள்கை தொடர்பாக சட்டரீதியான யுத்தம் தொடங்கியுள்ள நிலையில் அரசின் புதிய சட்டங்களை …

டிஜிட்டல் இறையாண்மையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறது இந்திய அரசு Read More

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் : ஜிஆர்டி நிறுவனம் வழங்கியது.

கொரோனா  தொற்றுப் பரவல் காரணமாக வேலை வாய்ப்பின்றி சிரமப்படும் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கு சின்னத்திரை நடிகர் சங்கம் ஒரு முன்னெப்பை மேற்கொண்டது.அதன் தலைவர் அ. ரவிவர்மா கொடையாளர்களை அணுகித்  தமது சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் …

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் : ஜிஆர்டி நிறுவனம் வழங்கியது. Read More

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மற்றும் சொத்துக்களினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்கிறது இந்தியா

சர்வதேச அதிகார வரம்புகளை கடக்கும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மற்றும் சொத்துக்களினால் ஏற்படும் மற்றுமொரு தீவிர வளர்ந்து வரும் சவாலை உலகம் தற்போது எதிர்கொண்டு வருகிறது என்று இந்தியா கூறியுள்ளது. ஊழலை எதிர்த்து போராடுவதில் உள்ள சவால்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய …

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மற்றும் சொத்துக்களினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்கிறது இந்தியா Read More

மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது  என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

நாடு முழுவதும் பெருந்தொற்று இரண்டாம் அலையின்  பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் இப்பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே செய்து, அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் …

மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது  என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் Read More

“குழந்தைகளிடையே கொவிட்-19 தொற்று: அச்சுறுத்தல்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்” 

குழந்தைகளிடையே கொவிட்-19 தொற்று குறித்து ஜூன் 4அன்று காணொலி வாயிலான நிகழ்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆரின் புதிய அமைப்பு சிஎஸ்ஐஆர்- அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சியின் தேசியக் கழகம் (என்ஐஎஸ்சிபிஆர்) ஏற்பாடு செய்திருந்தது. பெருந்தொற்றின் இரண்டாவது அலை பற்றியும், குழந்தைகளிடையே கொவிட்-19 தொற்றின் …

“குழந்தைகளிடையே கொவிட்-19 தொற்று: அச்சுறுத்தல்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்”  Read More

+2 பொதுத்தேர்வும், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் அவசியமென வலியுறுத்தினார் சரத்குமார்

மத்திய அரசு 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வைரத்து செய்துள்ள நிலையில், தமிழக அரசு கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், பெற்றோர்கள் உள்ளிட்டஅனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கேட்டு வருகிறது. அதில் பெரும்பான்மையான பெற்றோர்கள் கொரோனா தாக்கம் குறைந்தபிறகு தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிப்பதாகவே அறிகிறேன். தற்போதைய கொரோனா சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு எந்தஅளவிற்கு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். அதேஅளவிற்கு, கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகசெயல்படும் தமிழ்நாடு அறிவார்ந்த எதிர்கால சமுதாயத்தைஉருவாக்குவதற்கு தேர்வு நடத்தப்படுவதும் அவசியம்.  ஆனால், இந்த இக்கட்டான 2-வது அலை தாக்கத்தில் மாணவர்களுக்குபாதிப்பில்லாத வகையில் தேர்வு நடத்துவதற்கானசாத்தியக்கூறுகளை நன்கு ஆராய்ந்து, ஒரு வகுப்பறையில் 10 மாணவர்களுக்கு மிகாமல் பகுதியாக பிரித்து தேர்வு நடத்தவாய்ப்பிருந்தால், கொரோனா சூழல் கட்டுக்குள் வந்தபின்பு நடத்தவேண்டும். ஏனெனில், தற்போதைய சூழலால் உயர்கல்விக்கு அடித்தளமான 12 ஆம் வகுப்பு தேர்வுகளை சந்திக்காமல் மாணவர்கள் கடந்துசெல்வார்களேயானால், நிச்சயம் வேலைவாய்ப்பில் பல்வேறுசிக்கல்களை சந்திப்பார்கள். ஏற்கெனவே வேலைவாய்ப்பின்றிலட்சக்கணக்கான இளைஞர்கள் அவதியுறும்சூழலில், இந்தமாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது. எனவே, மாணவர்களின்எதிர்காலம் கேள்விக்குறியாகாதபடி, மாணவர்களின் பாதுகாப்பைஉறுதி செய்து தேர்வு நடத்த வேண்டும் என அகில இந்திய சமத்துவமக்கள் கட்சியின் சார்பில் தமிழக அரசிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

+2 பொதுத்தேர்வும், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் அவசியமென வலியுறுத்தினார் சரத்குமார் Read More

இந்தியாவில் 2021 மே மாத மொத்த ஜிஎஸ்டி வருவாய்  ரூ 1,02,709 கோடி 

2021 மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வசூல் ₹ 1,02,709 கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ₹ 17,592 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ₹ 22,653கோடியாகவும், ஐஜிஎஸ்டி ₹ 53,199 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ₹ 26,002 கோடியாகவும் சேர்த்து) மற்றும் செஸ் ₹ 9,265 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ₹ 868 கோடியாகவும் சேர்த்து) உள்ளது.  கொவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக 2021 மே …

இந்தியாவில் 2021 மே மாத மொத்த ஜிஎஸ்டி வருவாய்  ரூ 1,02,709 கோடி  Read More

போக்குவரத்து கூடுதல் ஆணையர் பதவி ஏற்றார்

பிரதிப்குமார், இ.கா.ப., அவர்கள்சென்னை பெருநகர காவல், போக்குவரத்துகூடுதல் ஆணையாளராக இன்று (05.6.2021)பொறுப்பேற்றுக் கொண்டார்

போக்குவரத்து கூடுதல் ஆணையர் பதவி ஏற்றார் Read More

காவலர் கோவிட் கேர் சென்டரில் தாயுடன்சிகிச்சையிலிருந்த 10 வயது சிறுமி முன்களபணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து வரைந்தஓவியத்தை காவல் ஆணையரிடம் வழங்கி நன்றிகூறினார். 

அண்ணா பல்கலைக்கழக  விடுதி  வளாகத்தில்காவல் துறையினருக்கான  கோவிட்-19 கேர்சென்டரில்  கொரோனா தொற்றால்  பாதிப்படைந்துசிகிச்சை பெற்று வரும்  காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை நேற்று (04.06.2021) சென்னைபெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் கவச  உடை அணிந்து  நேரில்   நலம் விசாரித்து, ஆறுதல் கூறியும்பழத்தொகுப்புகளையும் வழங்கினார். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுசிகிச்சையில் இருந்த தலைமைக்காவலர் K.சிகாமணிஎன்பவரது 10 வயது மகளான ஸ்ருதி என்ற பெண்அவரது தாய் தேவியுடன் கொரோனா நோய் தொற்றுசிகிச்சை பெற்று வந்த சிறுமி ஸ்ருதி தான்தனிமைபடுத்தப்பட்ட நாட்களில் பாதிக்கப்பட்டநிலையிலும் முன்களப்பணியாளர்களாக அரிப்பணிப்புஉணர்வுடன் பணி செய்து மக்களை காத்துவரும்மருத்துவ துறையினர், காவல் துறையினர் மற்றும்சுகாதார அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தான் வரைந்த “THANK YOU WARRIORSSAVING –  OUR LIVES” என்ற வாசகம் கொண்டஓவியத்தை கவச உடையில் ஆறுதல் கூற வந்த காவல் ஆணையரிடம் நேரில் வழங்கி தனது நன்றியைநெகிழ்வுடன் தெரிவித்தார். இந்த ஓவியம் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

காவலர் கோவிட் கேர் சென்டரில் தாயுடன்சிகிச்சையிலிருந்த 10 வயது சிறுமி முன்களபணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து வரைந்தஓவியத்தை காவல் ஆணையரிடம் வழங்கி நன்றிகூறினார்.  Read More