தமிழக முதல்வருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சந்திப்பு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.. என். இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் , தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரிடம் வாழ்த்து பெற்றார். அருகில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் …

தமிழக முதல்வருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சந்திப்பு! Read More

ஏழு பேர் மற்றும் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய சிறைத்துறை அமைச்சரிடம் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

புதுக்கோட்டையில்  நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியை நேரில் சந்தித்து, 28 ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் …

ஏழு பேர் மற்றும் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய சிறைத்துறை அமைச்சரிடம் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் Read More

பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது – உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய …

பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது – உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5 Read More

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் 9 சிங்கங்களுக்கு கொரோனாவாம்: ஒரு பெண் சிங்கம் இறந்தது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 12 சிங்கங்கள் இருந்தன. இந்த சிங்கங்களுக்காக 5 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 வயது நீலா என்ற பெண் சிங்கத்திற்கு மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் அதிகம் இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. ஆனாலும் அது இறந்தது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் 9 சிங்கங்களுக்கு கொரோனாவாம்: ஒரு பெண் சிங்கம் இறந்தது Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ளஹெராயின் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள்பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக  ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக கிடைத்த உளவுத்தகவலையடுத்து, ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாகசென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்தவிமானத்தில் வந்த 2 ஆப்பிரிக்க பெண்களின் நடவடிக்கைசந்தேகிக்கும் வகையில் இருந்தது. ஒருவர் வீல் சேரில்அமர்ந்தும், மற்றொருவர் ஆரோக்கியமாகவும் இருந்தார். வீல்சேரில் அமர்ந்திருந்தவரின் உடல் நிலை குறித்து சுங்கஅதிகாரிகள் விசாரித்தனர். அவர் பதற்றம் அடைந்துமுன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர்கள் கொண்டு வந்த பைகளை பரிசோதித்த போது, அதில் 8 பிளாஸ்டிக் பைகள்  மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மசாலா பொடிகள் தூவப்பட்டிருந்தன.  பரிசோதனையில் அவை வெள்ளை நிற ஹெராயின்  பவுடர்என உறுதி செய்யப்பட்டது. 9.87 கிலோ எடையில் இருந்தஇந்த ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தைமதிப்பு ரூ.70 கோடி. இவைகள் போதைப் பொருள் மற்றும்சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை கடத்திவந்த இரு பெண்களிடம் நடத்தியவிசாரணையில், ஒருவர் ஜிம்பாப்வே நாட்டிலிருந்துதில்லியில் உள்ள ஒரு பல்நோக்கு மருத்துவமனையில்சிகிச்சை பெற வந்தார் என்றும், அவருக்கு உதவியாக தென்ஆப்பிரிக்காவின்   கேப்டவுன் நகரில் வசிக்கும் மற்றொருபெண்ணும் வந்தது தெரியவந்தது. கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் சென்னையில்இறங்கினர். இருவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.  இது தொடர்பாக மேலும்விசாரணைகள் நடைப்பெறுவதாக, சென்னை சர்வதேசவிமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது Read More

உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக இந்திய ரயில்வே உருவெடுத்துக் கொண்டிருக்கிறது

உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக திகழ்வதற்கான  முயற்சிகளை மும்முரமாக எடுத்து வரும் இந்திய ரயில்வே, கரியமில வாயுவை முற்றிலும்வெளியிடாத அமைப்பாக 2030-ம் ஆண்டுக்குள் உருவெடுக்க  இருக்கிறது. மிகப்பெரிய மின்மயமாக்கல், தண்ணீர் மற்றும் காகிதசேமிப்பு, ரயில் பாதைகளில் அடிபடாமல் விலங்குகளைபாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை இந்தியரயில்வே எடுத்து வருகிறது. சுற்றுப்புறச் சூழலுக்குஉகந்த மற்றும் மாசை குறைக்கும் ரயில்வேமின்மயமாக்கல், 2014-ம் ஆண்டில் இருந்து பத்து மடங்குஅதிகரித்துள்ளது. சாலை போக்குவரத்துடன் ஒப்பிடும் போது சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் ரயில் போக்குவரத்தின்மூலம் பெருந்தொற்றின் போது உணவு தானியங்கள்மற்றும் ஆக்சிஜன் நாடு முழுவதும் எடுத்துசெல்லப்பட்டது. இந்திய ரயில்வேயின் பசுமை நடவடிக்கைகளுக்காகஜூலை 2016-ல் இந்திய ரயில்வே மற்றும் இந்தியதொழில் கூட்டமைப்புக்கு (சிஐஐ) இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 39 பணிமனைகள், 7 உற்பத்தி மையங்கள், 8 லோகோஷெட்கள் மற்றும் ஒரு சேமிப்பு கிடங்கு ஆகியவற்றுக்கு‘கிரீன்கோ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 பிளாட்டினம், 9 தங்கம் மற்றும் 2 வெள்ளி மதிப்பீடுகள்இவற்றில் அடங்கும். 19 ரயில் நிலையங்களுக்கும் பசுமை சான்றிதழ்கிடைத்துள்ளது. 3 பிளாட்டினம், 6 தங்கம் மற்றும் 6 வெள்ளி மதிப்பீடுகள் இவற்றில் அடங்கும். 27 ரயில்வேகட்டிடங்கள், அலுவலகங்கள், வளாகங்கள் மற்றும் இதரஇடங்களுக்கும் பசுமை சான்றிதழ் கிடைத்துள்ளது. 15 பிளாட்டினம், 9 தங்கம் மற்றும் 2 வெள்ளி மதிப்பீடுகள்இவற்றில் அடங்கும்.இதைத் தவிர, சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான ஐஎஸ்ஓ: 14001 சான்றிதழை கடந்த 2 வருடங்களில் 600 ரயில்நிலையங்கள் பெற்றுள்ளன. மொத்தம் 718 ரயில்நிலையங்கள் ஐஎஸ்ஓ: 14001 சான்றிதழை பெற்றுள்ளன.

உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக இந்திய ரயில்வே உருவெடுத்துக் கொண்டிருக்கிறது Read More

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை பொலிசில் ஒப்படைத்தவரை ஆணையர் பாராட்டினார்

  சென்னை, அண்ணாநகர், மேற்குவிரிவாக்கம், ஜீவன்பீமாநகர், எண்.10041 என்றமுகவரியில்வசித்துவரும்ஸ்டாலின்கண்ணா, வ/45,த/பெ.ராமதாஸ்என்பவர்நெற்குன்றத்தில் National Institute of Hotel Management என்றகல்விநிறுவனத்தைநடத்திவருகிறார். ஸ்டாலின்கண்ணாநேற்று (02.6.2021) மதியம்சுமார் 12.15 மணிக்கு, அவரதுகாரில்ஜெ.ஜெ.நகர், TVS காலனி, லோட்டஸ்ரெசிடென்சிஅருகில்சென்றுகொண்டிருந்தபோது, அங்குசாலையில்ரூபாய்நோட்டுக்கட்டுஒன்றுகிடந்ததைகண்டுஎடுத்துபார்த்தபோது, அதில்பணம் ரூ.50,000/- இருந்துள்ளது.  பணத்திற்குஉரிமையாளர்யார்எனதெரியாததால்ஸ்டாலின்கண்ணாஅப்பணத்தைஎடுத்துச்சென்று,  V-3 ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில்ஒப்படைத்தார்.இதுபோலR-1 மாம்பலம் காவல் நிலையதலைமைக்காவலர்பிரேம்குமார் (த.கா.26385) என்பவர்இன்று (03.6.2021) அதிகாலைசுமார் 06.30 மணியளவில்ரோந்துபணியில், தி.நகர்சாலையிலுள்ளயூனியன்பேங்க்ஆப்இந்தியாவங்கியின் ATM மையத்தில்தணிக்கைசெய்யசென்றபோது, அங்கு ரூ.10,000/- கேட்பாரற்றுகிடந்துள்ளது. காவலர்பிரேம்குமார்அப்பணத்தைஎடுத்துவிசாரணைசெய்தபோது, யாரும்அப்பணத்திற்குஉரிமையாளர்யார்எனதெரியவில்லை.ஆகவே, தலைமைக்காவலர்பிரேம்குமார்மேற்படிபணம் ரூ.10,000/-ஐR-1 மாம்பலம் காவல் நிலையஆய்வாளரிடம்ஒப்படைத்துஉரியவரிடம்ஒப்படைக்கநடவடிக்கைகள்மேற்கொண்டார். மேற்படிசம்பவங்களில்கீழேகிடந்தபணத்தைகண்டெடுத்துநேர்மையாக காவல் நிலையத்தில்ஒப்படைத்து,மற்றவர்களுக்குமுன்னுதாரணமாகசெயல்பட்டஅண்ணாநகரைச்சேர்ந்தஸ்டாலின்கண்ணாமற்றும்R-1 மாம்பலம் காவல் நிலையதலைமைக்காவலர்பிரேம்குமார்ஆகியோரை, சென்னைபெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள்இன்று (03.6.2021) நேரில்அழைத்துபாராட்டிவெகுமதிவழங்கிகௌரவித்தார். இதுவரையில்பணம்இழந்தவர்கள்குறித்தவிவரம்கிடைக்கப்பெறவில்லை.எனவே, பணத்தைஇழந்தவர்கள்உரியசான்றுகளுடன்V-3 ஜெ.ஜெ.நகர்மற்றும் R-1 மாம்பலம் காவல் நிலையஆய்வாளர்களிடம்தொடர்புகொண்டுபெற்றுக்கொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை பொலிசில் ஒப்படைத்தவரை ஆணையர் பாராட்டினார் Read More

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு, எதனால் ஏற்படுகிறதென இணைய கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கமளித்தார்கள்

.கொவிட்-19 பாதிப்புகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவில் மட்டுமே கருப்பு பூஞ்சை எனப்படும் மியுகோர்மைகோஸிஸ் தொற்று பரவல் உள்ளதாக இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறினார். ‘கொவிட்-19 தொடர்புடைய மியுகோர்மைகோஸிஸ் மற்றும் வாய் சுகாதாரம்‘ எனும் தலைப்பில் பத்திரிகை தகவல் …

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு, எதனால் ஏற்படுகிறதென இணைய கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கமளித்தார்கள் Read More

8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நட்சத்திர உருவாக்கம் குறைந்ததற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திரங்கள் உருவானது குறித்து ஆய்வு செய்த வானியல் ஆராய்ச்சியாளர்கள், சுமார் 8 முதல் 10 பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதிக அளவில் பால்வெளிகள் உருவானதையும் அதன் பிறகு அது படிப்படியாக குறைந்ததையும் கண்டறிந்து துணுக்குற்றனர். இதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்ட அவர்கள், எரிபொருள் பற்றாக்குறையே …

8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நட்சத்திர உருவாக்கம் குறைந்ததற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு Read More

இந்தியாவில் வெளிநாட்டினர் தங்கும் காலம் ஆக்ஸ்ட 31ம் தேதி வரை செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது

  கொவிட் தொற்று காரணமாக விமானம் கிடைக்காமல், இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் விசாஅல்லது தங்கும் காலம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரைசெல்லுபடியாகும் என மத்திய உள்துறை அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது.  கடந்தாண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாகசெல்லுபடியாகும் விசா மூலம் இந்தியா வந்தவெளிநாட்டினர் பலர், கொவிட் தொற்று காரணமாகவிமானம் கிடைக்காததால் இங்கேயே தங்கியுள்ளனர். ஊரடங்கு காரணமாக, இவர்கள் தங்கள் விசா காலத்தைநீட்டிப்பதிலும் சிரமத்தை சந்தித்தனர். இதையடுத்துமத்திய உள்துறை அமைச்சகம் கடந்தாண்டு ஜூன் 29ம்தேதி பிறப்பித்த உத்தரவில், 2020 ஜூன் 30ம் தேதியுடன்விசா காலம் முடிவடைந்த வெளிநாட்டினருக்கு, சர்வதேசவிமான போக்குவரத்து தொடங்கும் தேதியிலிருந்து 30 நாட்கள் வரை விசா செல்லுபடியாகும் எனகூறியிருந்தது.  அப்போது முதல் ஒவ்வொரு மாதமும், வெளிநாட்டினர்தங்கள் விசா மற்றும் தங்கும் காலத்தை மாதந்தோறும்நீட்டித்து வந்தனர்.  இயல்பான விமான போக்குவரத்து இன்னும்தொடங்காததால், இந்த விவகாரம் குறித்து மத்தியஉள்துறை அமைச்சகம் மறு பரிசீலனை செய்து, வெளிநாட்டினருக்கான விசா அல்லது தங்கும் காலத்தைஅபராதம் இன்றி வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரைநீட்டித்துள்ளது.  இது போன்ற வெளிநாட்டினர், தங்கள்விசா நீட்டிப்புக்கான விண்ணப்பத்தை, வெளிநாட்டினர்பதிவு அலுவலகத்தில் (FRRO / FRO) விண்ணப்பிக்கதேவையில்லை. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன், அதற்கானஅனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்குவிசா காலத்தைவிட கூடுதலாக தங்கிய காலத்திற்கு  அபராதம் விதிக்கப்பட மாட்டாது.

இந்தியாவில் வெளிநாட்டினர் தங்கும் காலம் ஆக்ஸ்ட 31ம் தேதி வரை செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது Read More