கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பாற்ற மு.க.ஸ்டாலினின் உடனடி உத்தரவுகள்

கொரோனோவால் உயிரிழந்த குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கிட, மாவட்ட அளவில், மாவட்ட சிறப்புப் பணிப் பிரிவு ( Task Force ) அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்களுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி. 18 வயது நிறைவடையும் போது, அந்த …

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பாற்ற மு.க.ஸ்டாலினின் உடனடி உத்தரவுகள் Read More

கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.41.40 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

மருத்துவ உபகரணங்களை வாங்க மேலும் 41.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் இதுவரை 186.15 கோடி ரூபாய் நிதி நிவாரணமாக பெறப்பட்டுள்ளது. …

கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.41.40 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு Read More

கொரோனா வைரஸ் பற்றி பிரிட்டன் பிரதமரின் புதிய கருத்து

கொரோனா வைரசின் தோற்றம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சீனாவின் உஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியதாக கருதவில்லை என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி …

கொரோனா வைரஸ் பற்றி பிரிட்டன் பிரதமரின் புதிய கருத்து Read More

தமிழகத்திற்கு தேவையானவற்றை இந்திய அரசு தந்துகொண்டிற்கிறது என்கிறார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

‘கொரோனா தொற்றை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசிகள், ஆக்சிஜன் என, தமிழக அரசு கேட்கும் அனைத்தையும் மத்திய அரசு தருகிறது; எந்த குறையும் கிடையாது’ என, தி.மு.க., தெரிவித்து உள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று டில்லி வந்தபோது, …

தமிழகத்திற்கு தேவையானவற்றை இந்திய அரசு தந்துகொண்டிற்கிறது என்கிறார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு Read More

உணவின்றி தவிப்போர்க்கு  இசையமைப்பாளர் ராஜேஸ் உணவு வழங்கினார்

நடிகர் தினேஷ் MASTER மற்றும் நடிகர் யோகிபாபு நடிப்பில் S.P ராஜ்குமார் இயக்கத்தில் இப்படத்தை தயாரித்து வரும் DISCOVER STUDIO FILM COMPANY நடத்தி வரும்  இசையமைப்பாளர் V R RAJESH மற்றும் குழுவினர் –  12 வது நாளான இன்று …

உணவின்றி தவிப்போர்க்கு  இசையமைப்பாளர் ராஜேஸ் உணவு வழங்கினார் Read More

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  ​​கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு கடந்த 10.5.2021 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்து நடைபெற்று வந்த நிலையில், 24.5.2021 முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது அதன்பேரில், சென்னை பெருநகர காவல் …

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆலோசணைக் கூட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில், வா;த்தக சங்க பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இராமநாதபுரம் சார் ஆட்சியா; அலுவலக கூட்ட அரங்கில் இன்று (29.05.2021) மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில், முழு …

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆலோசணைக் கூட்டம் Read More

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொவிட் பரிசோதனை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொவிட்-19 தொற்று ஏற்பட்டது முதல், அதற்கான பரிசோதனை கட்டமைப்புகளை இந்தியா பல மடங்கு அதிகரித்துள்ளது.  இந்நிலையில் மிக எளிமையான , புதுமையான கொவிட் பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்(NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து …

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொவிட் பரிசோதனை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Read More

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று ரூ.53 லட்சம் மோசடி பணத்தை மீட்டுக் கொடுத்த காவலரை ஆணையர் பாராட்டினார்

​​சென்னை பெருநகரில் 12 காவல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சைபர்கிரைம்குற்றப்பிரிவில் அளிக்கப்படும் புகாரின் மீது உடனேவிசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் பெறப்படும்பணபரிவர்த்தனை ஏமாற்றம் அடைந்த புகார்களில்உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   இதன் தொடர்ச்சியாக வில்லிவாக்கம், சிட்கோ நகர், 18வது தெருவில் வசித்து வரும் அன்பரசு, வ/62, த/பெ.பிச்சையப்பன் என்பவர் ONGC நிறுவனத்தில் வேலைசெய்து பணி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 25.05.2021 அன்று மதியம் சுமார் 03.30 மணியளவில் அன்பரசுவின்செல்போனுக்கு Pan Card Update செய்ய வேண்டும் என்றுவங்கியில் இருந்து அனுப்புவது போல குறுஞ்செய்திவந்துள்ளது. சிறிது நேரத்தில் அவரது செல்போன்எண்ணில் அழைத்து பேசிய நபர் தான் SBI வங்கியின்துணை மேலாளர் பேசுவதாகவும் தங்களின் Pan Card Update செய்ய வேண்டும் என்றும் அதற்காக தங்களின்செல்போன் எண்ணிற்கு வந்துள்ள குறுஞ்செய்திஅனுப்பியுள்ளதாகவும், தற்போது அனுப்பிய OTPஎண்ணை தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். இதனைஉண்மையென நம்பிய அன்பரசு OTP எண்ணைஅனுப்பிய சில நிமிடங்களில் அன்பரசுவின் வங்கிகணக்கிலிருந்து சிறிது சிறிதாக என ரூ.53,25,000/- பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, அன்பரசு 26.05.2021 அன்று V-1 வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டபுகாரை அண்ணாநகர் காவல் மாவட்ட துணைஆணையர் திரு.G.ஜவஹர், இ.கா.ப., அவர்கள்கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சைபர்குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்து உடனே, அண்ணாநகர்காவல் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர்திரு.ராஜாசிங், காவலர்கள் மணிகண்ட ஐயப்பன்(கா.46781) மற்றும் ராம்சங்கர் (கா.46193 ) ஆகியோர்துரிதமாக செயல்பட்டு அன்பரசுவின் பாரத ஸ்டேட் வங்கிநிர்வாகத்தில் விசாரணை செய்தபோது, எதிரிகள்அன்பரசுவின் வங்கி கணக்கிலிருந்து ரூ.25,000/- ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் மற்றொரு வங்கிகணக்கிற்கு மாற்றியுள்ளதும், ரூ.53,00,000/- அவரதுவங்கி கணக்கில் Fixed Deposit ஆக பண பரிவர்த்தனைசெய்து பின்னர் OTP எண்ணை பெற்று ரூ.53 லட்சத்தைஅபகரிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. உடனே சைபர்குழுவினர் பரிந்துரையின்பேரில் வங்கி நிர்வாகம்அன்பரசுவின் Net banking அக்கவுண்டை நீக்கம் செய்து,பணபரிவர்த்தனை மூலம் மாற்றம் செய்யப்பட இருந்தரூ.53 லட்சத்தை திரும்ப அவரது சேமிப்பு வங்கிகணக்கிற்கு மாற்றப்பட்டது. மேலும், ஆன்லைன்பரிவர்த்தனையில் மோசடியான பணம் ரூ.25,000/- பணத்தையும் மீட்டு தருவதாக வங்கி நிர்வாகம்உறுதியளித்தது. வங்கி அதிகாரி போல செல்போனில் பேசி, ஆன்லைன் மூலம் இழந்த தனது பணத்தை பெற்று தந்தஅண்ணாநகர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு உதவிஆய்வாளர் ராஜாசிங் மற்றும் காவல் குழுவினருக்குநெகிழ்ந்து நன்றி கூறினார். அன்பரசு பாராட்டினார். மேலும், மேற்படி சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இழந்தபணத்தை மீள பெற்றுத் தந்த அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திரு.ராஜாசிங், காவலர்கள் மணிகண்ட ஐயப்பன் (கா.46781) மற்றும்ராம்சங்கர் (கா.46193) ஆகியோரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் நேற்று (27.5.2021) நேரில் அழைத்துப் பாராட்டிவெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று ரூ.53 லட்சம் மோசடி பணத்தை மீட்டுக் கொடுத்த காவலரை ஆணையர் பாராட்டினார் Read More

கொரோனா தொற்றில் சிகிச்சை பெறும் காவலர்களின் வீட்டுக்குச் சென்று ஆணையர் ஆறுதல் கூறினார்

​​சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்குகாரணமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வோர் மீதுபல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும்காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் வாகனத் தணிக்கைமற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் மக்களைநேரடியாக சந்தித்து வருவதால், காவல்துறையினர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகரஆயுதப்படை தலைமைக் காவலர் திரு.சதிஷ்பாபு, வ/49, (த.கா.17752) என்பவருக்கு கடந்த 14.5.2021ம் தேதிகொரோனா தொற்று ஏற்பட்டு, கிண்டி Kings மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை, சென்னைபெருநர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரஆயுதப்படை துணை ஆணையாளர் திரு.கே.சௌந்தரராஜன்அவர்கள் நேரில் சென்று உடல்நிலை குறித்து விவரம் அறிந்துகாவல் ஆணையாளர் அவர்களிடம் தெரிவித்ததன் பேரில், மேல் சிகிச்சைக்காக 19.05.2021 தேதி கிரீம்ஸ் ரோடுஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.  மேற்படி தலைமைக்காவலர் திரு.சதீஷ்பாபுவின்குடும்பத்தினர் வசித்து வரும் கீழ்ப்பாக்கம், லூத்தரல் கார்டன்காவலர் குடியிருப்பிற்கு இன்று (28.05.2021) காலை 11.30 மணியளவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் நேரில் சென்றுசதீஷ்பாபுவின் குடும்பத்தினர்களை சந்தித்து,  அவசரசிகிச்சை பிரிவில் இருந்து வரும் சதீஷ்பாபுவிற்கு தேவையானஅனைத்து உதவிகளையும் செய்திட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் சென்னை பெருநகர ஆயுதப்படை துணைஆணையர் திரு.கே.சௌந்தரராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கொரோனா தொற்றில் சிகிச்சை பெறும் காவலர்களின் வீட்டுக்குச் சென்று ஆணையர் ஆறுதல் கூறினார் Read More