கோடநாடு வழக்கு: ‘குற்றவாளியை நெருங்கிய காவல்துறை’ -எடப்பாடி பழனிசாமிதான்முழு பொறுப்பு – பெங்களூரு புகழேந்தி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டதாக அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இந்தச் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமியே முழுப் பொறுப்பு’ எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.   நீலகிரி மாவட்டம், …

கோடநாடு வழக்கு: ‘குற்றவாளியை நெருங்கிய காவல்துறை’ -எடப்பாடி பழனிசாமிதான்முழு பொறுப்பு – பெங்களூரு புகழேந்தி Read More

பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் – அதிர்ச்சி தரும் ஆய்வு

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ‘எவிடென்ஸ்’ என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,’ என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர். தமிழ்நாட்டில் கடந்த …

பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் – அதிர்ச்சி தரும் ஆய்வு Read More

நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு கமல் ஹாசன் ஆறுதல்

அநீதியான நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தால்  உயிரை மாய்த்துக்கொண்ட  மாணவர் தனுஷின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் 12.9.2021 அன்று தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.   “இது இறுதி மரணமாக இருக்கட்டும். எந்த ஒரு தாய்க்கும் …

நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு கமல் ஹாசன் ஆறுதல் Read More

நிரந்தரமாக நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானாத்தை நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நீட் என்னும் தேர்வைக்கொண்டு வந்து மருத்துவக் கல்விக் கனவைச்சிதைத்து வரும் ஒன்றிய அரசுக்கு எதிராகக் கடந்தநான்காண்டு காலமாகத் தமிழ்நாட்டில் மிகக்கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  விலைமதிக்க முடியாத மாணவ, மாணவியர் தங்களது இன்னுயிரை இந்தப்போராட்டத்துக்குத் தாரைவார்த்து மறைந்துபோயிருக்கிறார்கள். தொடக்கத்தில் இருந்தே இந்தநீட் தேர்வைத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்துவருகிறது. ஏனென்றால் மாணவர்களுக்குக் கல்வித்தடையை ஏற்படுத்தக்கூடிய நுழைவுத் தேர்வுக்குநிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு. இதன் தொடர்ச்சியாக நீட் தேர்வை இரத்துசெய்ய, கழக அரசு அமைந்தவுடன் முதல் சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்றுதிராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல்அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறோம்.  அதைநிறைவேற்றும் வகையில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியஇளநிலை மருத்துவக் கல்விச் சேர்க்கைகளை, இனிமேல் 12ஆம் வகுப்புத் தேர்வில் பெற்றமதிப்பெண்களின் அடிப்படையில் நடத்துவதற்குஏதுவாக, வலிமையான  சட்டமுன்வடிவினைஇப்பேரவையில் நான் முன்மொழிகிறேன்.  கழக அரசு பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்குஎதிரான சட்டப் போராட்டத்தைத்தொடங்கியிருக்கிறோம்.  ஒன்றிய அரசால்நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில்பின்தங்கியுள்ள மாணவர்களுக்குப் பாதிப்புஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கைசமர்ப்பித்திட ஓய்வுபெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம். அரசாணை எண் 283, மருத்துவம், மக்கள்நல்வாழ்வுத்துறை, நாள் 10–6–2021 அன்று இந்தக் குழுஅமைக்கப்பட்டது.  இந்தக் குழுவிலே  பல்வேறுகல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம்பெற்றுஇருந்தார்கள். இந்த  உயர்மட்டக் குழுவின்  ஆய்வுவரம்புகளும் வெளியிடப்பட்டன. பொதுமக்கள்அனைவரிடம் இருந்தும் கருத்துக்களை இக்குழுகேட்டுப் பெற்றது.  மின்னஞ்சல், கடிதங்கள் மற்றும்ஆணையத்தில் வைக்கப்பட்டிருந்த கருத்துக் கேட்புப்பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் எனஆணையத்துக்குப் பல்லாயிரக்கணக்கானவர்கள்தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.  இந்த வழிமுறைகளின்வாயிலாக 86 ஆயிரத்து 342 பேர்களிடமிருந்துபெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து, தனது விரிவானபரிந்துரைகளை நீதியரசர் ஏ.கே. இராஜன் குழு  14–7–2021 அன்று அரசுக்கு அளித்தது.  அந்தப்பரிந்துரைகளில் சமுதாயத்தில் பின்தங்கியோர்மருத்துவக் கல்வியைப் பெறும் கனவிற்குஇடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில்வளமிகுந்த பிரிவினருக்குச் சாதகமாகவும் இருந்து, எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவப்படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப்பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளதுஎன்று தெரிவித்துள்ளது.  குறிப்பாக, அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் குறைவாகக் கொண்டுள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும்பட்டியலின பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச்சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாகப்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வுஉறுதிசெய்வதாகத் தெரியவில்லை எனவும், ஒப்பிடுகையில், குறைந்த செயல்திறன் கொண்ட(தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள்மற்றும் மேனிலை மதிப்பெண்களில்) மாணவர்கள்எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெறுவதற்குமட்டுமே தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுபுகுத்தியுள்ளது எனவும் அறிக்கை முடிவுகள்சுட்டிக்காட்டுகின்றன.  ஆகவே, 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைச் சட்டத்தை(தமிழ்நாடு சட்டம் 3/2007) போன்றதொரு சட்டத்தைப்மாநில அரசு நிறைவேற்றி, அதற்காகக் குடியரசுத்தலைவருடைய ஒப்புதலைப் பெறலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த உயர்மட்டக் குழுஅளித்த விரிவான பரிந்துரைகளைச் செயல்படுத்தநடவடிக்கை மேற்கொள்ள, தலைமைச் செயலாளர்அவர்கள் தலைமையில் அரசு செயலாளர்களைக்கொண்ட குழு ஒன்று 15–7–2021 அன்றுஅமைக்கப்பட்டது.  செயலாளர்கள் குழு, 2007-ல்தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டத்தைப் போன்றுமருத்துவக் கல்விச் சேர்க்கைக்கு நீட் தேர்வினைவிலக்குவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சட்டம்இயற்றி, சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெற்று, அதற்கு மாண்புமிகு குடியரசுத் தலைவருடையஒப்புதல் பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளது. நீட் தேர்வானது மருத்துவக் கல்வியின் தரத்தைமேம்படுத்துகிறது என்பதும் தவறானதே. 2017ஆம்ஆண்டிற்கு முன்பிருந்தே அதிக மருத்துவம் மற்றும்பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளமாநிலங்களுள் தமிழ்நாடு ஒன்றாக இருந்தது. இந்தநிறுவனங்களிடமிருந்து பட்டம் பெற்ற மருத்துவர்கள்மற்றும் பல் மருத்துவர்கள் மிகவும் திறமைவாய்ந்தவராக விளங்கினர். எனவே, மேல்நிலைப்பள்ளிப் பாடத்திட்டம் போதுமான தரத்தில் இருக்கும்சூழலில், தகுதித் தேர்வின் அடிப்படையில்மேற்கொள்ளப்படும் சேர்க்கையானது எந்தவகையிலும் கல்வியின் தரத்தைக் குறைத்துவிடாது. மேலும், பள்ளித் தேர்வு மதிப்பெண்கள்நெறிப்படுத்துதல் முறைமூலமாக சரிசெய்யப்பட்டால்அது முறையான, நியாயமான மற்றும் நடுநிலையானசேர்க்கை முறையை வழங்கும்.  மருத்துவக் கல்விப்படிப்புகளுக்கான சேர்க்கையினை இந்தியஅரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்மூன்றாவது பட்டியலில் 25-வது உள்ளீட்டில்காணலாம்.  எனவே, மாநில அரசானது அதைமுறைப்படுத்த தகுதியுடையது. ஆகவே, இன்றுஎன்னால் இந்தச் சட்டமுன்வடிவுஅறிமுகப்படுத்தப்படுகிறது.  இந்தப் புதிய சட்டமுன்வடிவில், மருத்துவஇளநிலைப் படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுசெய்யும் இடங்கள் ஆகியவற்றிற்கு 12ஆம் வகுப்புத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர்சேர்க்கை நடத்த முன்மொழியப்படுகிறது. மேலும், அரசுப் பள்ளிமாணவர்களுக்கு 7.5 விழுக்காடு முன்னுரிமைஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது.  உயர்மட்டக் குழுவின் பரிந்துரையைக்கவனமாகப் பரிசீலித்த பின்பு, சமூகநீதியைஉறுதிசெய்யவும், சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகளைநிலைநிறுத்தவும், பாதிப்பிற்குள்ளாகக்கூடியமாணவர்களைப் பாதுகாக்கவும், மாநிலத்தில், முக்கியமாக கிராமப் பகுதிகளில், வலுவான சுகாதாரக்கட்டமைப்பை உறுதி செய்யவும், பன்னிரண்டாம்வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்அடிப்படையில் அனைத்து மருத்துவப்படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ளஇச்சட்டமுன்வடிவு  கொண்டு வரப்பட்டுள்ளது.  எனவே, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தமாமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டமுன்வடிவினைஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்.  …

நிரந்தரமாக நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானாத்தை நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் அழகிரி பாராட்டினார்

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் மக்கள் நலன்சார்ந்து பல்வேறு திட்டங்கள் நிறைவேறுகிற வகையில்அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இன்றைக்குசட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்அவர்கள் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறுகிற வகையில்மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறார். இதற்காகத் தமிழக முதலமைச்சரை மனதாரப்பாராட்டுகிறேன். கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வுக்குவிலக்கு பெறுவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டுநிறைவேற்றப்பட்டு, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காகஅன்றைக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் பெற்றிருந்தஅ.தி.மு.க. அதற்காக தீவிர முயற்சிகளைமேற்கொள்ளவில்லை. மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதவேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டத் திருத்தம் போன்றபா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில்ஆதரவாக வாக்களித்த போது, நீட் தேர்வுக்கு விலக்கு பெறுகிறவகையில் முன்நிபந்தனைகளை விதித்திருக்கலாம். ஆனால், மடியில் கனம் இருக்கிற காரணத்தினாலேமுதுகெலும்பில்லாத அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. அரசிடம்நிபந்தனை விதிக்க முடியவில்லை. அதற்காக தமிழகத்தில்உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களைவஞ்சிக்கிற வகையில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. நீட்தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் அனிதாஉள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது கூட, சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ்என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட அவலம்நிகழ்ந்துள்ளது. இந்த தற்கொலைகளுக்கு  அ.தி.மு.க. ஆட்சிதான் பொறுப்பாகும்.  கடந்த சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்குகோரும் தீர்மானங்கள் மத்திய அரசால் திருப்பிஅனுப்பப்பட்டதை தமிழக சட்டப் பேரவைக்குத்தெரிவிக்காமல் இரண்டு ஆண்டுகள் மூடி மறைத்ததுமிகப்பெரிய மக்கள் விரோதச் செயலாகும். இதன்மூலம் தமிழகசட்டசபையின் உரிமைகளை அவமதித்த குற்றத்தைஅ.தி.மு.க. அரசு செய்தது. இதற்காக ஜனநாயகத்தில் எவ்வளவுபெரிய தண்டனையை வேண்டுமானாலும் வழங்கலாம். அத்தகைய படுபாதகச் செயலை செய்தவர்கள் இன்றைக்குதற்கொலை செய்து கொண்ட மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்றமாணவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டுமென்று கோருகிறார்கள். கடந்த காலஅ.தி.மு.க. ஆட்சியின் போது அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போது, குறைந்தபட்சம் இரங்கல் செய்தி கூட வெளியிடாதவர்கள்இப்போது இழப்பீட்டுத் தொகை கேட்பது அப்பட்டமானசந்தர்ப்பவாத செயலாகும். அதேபோல, நீட் தேர்வு காரணமாக கிராமப்புறத்திலே படிக்கிறஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின்மருத்துவ படிப்பிற்கான கனவுகளைச் சிதைத்துச் சீரழித்தஅ.தி.மு.க.வினருக்கு உரிய தண்டனையை கடந்த மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தில் கல்வி பொதுப் பட்டியலில்இருக்கிறது. இதுகுறித்து சட்டம் இயற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு சமஉரிமை இருக்கிறது. இந்நிலையில்நீட் தேர்வு குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்குமுன்பாக மாநில அரசுகளை கலந்தாலோசனை செய்துஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக, தன்னிச்சையாக மாநில உரிமைகளை பறிக்கிற வகையில்பொது பட்டியலில் உள்ள கல்வி சம்மந்தமான நீட் தேர்வுகுறித்து மத்திய பா.ஜ.க. அரசு சட்டம் இயற்றுவது கூட்டாட்சிதத்துவத்திற்கு கேடு விளைவிப்பதாகும்.  எனவே, நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு பெறுகிறவகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கிற மசோதாவிற்குகுடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு உரியஅழுத்தம் தருகிற அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர்மேற்கொள்வார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்றகூட்டணி கட்சி உறுப்பினர்கள் மத்திய பா.ஜ.க. அரசுக்குதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின்வழிகாட்டுதலின்படி  உரிய அழுத்தத்தைக் கொடுப்பார்கள். இதன்மூலம், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தரவிலக்கு பெறுகிற  தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றிபெறும் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்து நீட் தேர்விலிருந்துவிலக்கு பெறுகிற வகையில் தமிழக முதல்வர் எடுத்திருக்கிறநடவடிக்கை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெறும் என்பதை உறுதியாகக்கூற விரும்புகிறேன்.

நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் அழகிரி பாராட்டினார் Read More

நீட்’ தேர்வு தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற எதிர் கட்சி தலைவரிடம் ஆதரவு கேட்டு முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை

நீட்’ சம்பந்தமாக இங்கே கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த மசோதாவினை வரவேற்பதாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொல்லியிருக்கிறார்.  அதற்காக உள்ளபடியே நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  ஏற்கெனவே, ஜல்லிக்கட்டு தொடர்பாக தீர்மானம் வந்தபோதும், அப்போது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும், அரசியல் பார்க்காமல் நாங்களும் ஆதரித்தோம் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதேபோல, ‘நீட்’-க்காகக் …

நீட்’ தேர்வு தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற எதிர் கட்சி தலைவரிடம் ஆதரவு கேட்டு முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களும்; மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் mauhJ உழைத்திட்ட இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், மாணவ, மாணவியர் அனைவரும் சிறந்த  கல்வி பயில்வதற்குத் njitahd அனைத்து …

நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி Read More

சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள் நிறைந்துள்ளன – மு.க.ஸ்டாலின

திமுகவின் ‘முப்பெரும் விழா குறித்து ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15,  தி.மு.கழகம் தொடங்கப்பட்ட …

சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள் நிறைந்துள்ளன – மு.க.ஸ்டாலின Read More

700 ஆயுள் கைதிகள் விடுதலையளித்த தமிழக அரசு அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் …

700 ஆயுள் கைதிகள் விடுதலையளித்த தமிழக அரசு அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More

நீட் தேர்வு பயத்தில் மாணவனின் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் – எடப்பாடி பழனிசாமி

தமிழ் நாட்டில் நீட் தேர்வினை நடத்த விடமாட்டோம் என்று கூறிய  விடியல் அரசின் வாய்ச்சவடாலால் மாணவச்செல்வத்தை இழந்து தவிக்கும் பெற்றோர். தி.மு.க. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் …

நீட் தேர்வு பயத்தில் மாணவனின் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் – எடப்பாடி பழனிசாமி Read More