திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகியதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 16.9.2021 அன்று தலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக,இந்து சமய அறநிலையத் துறை சார்பில்திருச்செந்தூர்– அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில், சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில்நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைதுவக்கி வைத்தார். இறையருள் பெற திருக்கோயில்களுக்குவருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதேஅன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில்754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம்வழங்கப்பட்டு வருகிறது. முந்தையகாலகட்டங்களிலும் திருக்கோயில்கள் மூலம்ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்துவந்துள்ளது. இதனைப் பின்பற்றி கொரோனாபெருந்தொற்று காலத்தில், ஏழை எளிய மக்களின்பசியினை போக்கும் விதமாக திருக்கோயில்கள்சார்பாக 44 இலட்சம் பேருக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம்மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமானமுறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட,இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல்ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்துமுதுநிலை திருக்கோயில்களிலும் பெறப்பட்டுள்ளது.  தற்போது, பழநி – அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், திருவரங்கம் – அருள்மிகுஅரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டுதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு, திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் 4.9.2021 அன்று இந்து சமயஅறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில்திருச்செந்தூர் – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில், சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்றுதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட அன்னதானத்திட்டத்தின் வாயிலாக இம்மூன்று திருக்கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத்திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும்.       இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே. சேகர்பாபு, சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர்முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளிமாவட்ட ஆட்சித் தலைவர்  சு. சிவராசு, இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்  டாக்டர் கே. செந்தில்ராஜ், இ.ஆ.ப., திருவள்ளூர்மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகியதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் Read More

விடியா’ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் கூறுகிறார் இ.பி.எஸ்

“கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம்.  வளர்ச்சிக்கு அறிகுறி அது.  நாம் மக்கள், வன விலங்குகள் அல்ல.  இது நாடு, காடு அல்ல.  காட்டு முறையைக் கையாண்டால் அதற்குப் பெயர் ஜனநாயகமாகாது; பாசிச முறை அது’’ என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் …

விடியா’ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் கூறுகிறார் இ.பி.எஸ் Read More

பொது சொத்துக்களை விற்பது நாட்டின் சுயசார்பை தகர்க்கும் செயலாகும் – இ.கம்யூ.

ஒன்றிய அரசின் அமைச்சரவை பிரதமரின் தலைமையில் கூடி தொலைதொடர்புத்துறையில் நூறு சதவீதம் ‘அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் நிதியமைச்சர் பொதுச் சொத்துக்களை விற்று 6.5 லட்சம் கோடி ரூபாய் பணம் திரட்டுவது என்ற விபரீதத் திட்டத்தை அறிவித்துள்ளார். நாடு விடுதலை …

பொது சொத்துக்களை விற்பது நாட்டின் சுயசார்பை தகர்க்கும் செயலாகும் – இ.கம்யூ. Read More

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் தனித்து போட்டி

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி  மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. புதிய உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் நிற்கும் உங்கள் கரங்களுக்கு வலுச்சேர்க்க …

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் தனித்து போட்டி Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீரமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என …

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை Read More

வன்னியர் போராட்டத்தை சமூக நீதி போராட்டமாக அங்கீகரித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் காடுவெட்டி குருவின் மகள்

1987 செப்டம்பர் 17 ல் வன்னிய மக்களின் உரிமைக்காக போராட்டம் நடத்திய 21 வன்னிய தியாகிகளை அன்றைய  எம்ஜிஆர் அரசு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது.. நம் உரிமைக்காக உயிர் நீத்த 21 தியாகிகளின்  போராட்டத்தை அங்கீகரித்த இன காவலர் முன்னாள் முதல்வர் மு. …

வன்னியர் போராட்டத்தை சமூக நீதி போராட்டமாக அங்கீகரித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் காடுவெட்டி குருவின் மகள் Read More

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டுமென முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்

நேற்று (15-09-2021) மாலை, சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதுபோது, முரசொலி செல்வம் எழுதிய ‘முரசொலி சில நினைவலைகள்’ புத்தகத்தையும் வெளியிட்டார். இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் …

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டுமென முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார் Read More

நீட் தேர்வுக்கு மேலும் ஒரு மாணவி சௌந்தர்யா தற்கொலை- மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் வைகோ வேண்டுகோள்

நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவது இல்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட்தேர்வு, பல மாணவ, மாணவியரின் உயிருக்கு உலை வைத்து வருகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் …

நீட் தேர்வுக்கு மேலும் ஒரு மாணவி சௌந்தர்யா தற்கொலை- மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் வைகோ வேண்டுகோள் Read More

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; நீட் என்னும் அநீதியை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் – முதல்வர் ஸ்டாலின்

கடந்த 2017-ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்த போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட போதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்று …

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; நீட் என்னும் அநீதியை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் – முதல்வர் ஸ்டாலின் Read More

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய தனித்துப் போட்டி – விஜயகாந்த்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021 9 மாவட்ட ஊரகஉள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது, போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16.09.2021, 17.09.2021 இரண்டு நாட்கள் காலை 10.00 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் …

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய தனித்துப் போட்டி – விஜயகாந்த் Read More