தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பில் தீவிரம் காட்டுவதின் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வரும் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை கடன் வசூலிப்பை நிறுத்தி வைக்க இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.  இதை மீறி, வங்கிசார …

தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பில் தீவிரம் காட்டுவதின் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார் Read More

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும்ஒரு வாரம் நீட்டிப்பு

கொரோனா நோய்த் தொற்று பரவலைக்குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின்உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர்மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்குநடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்றுகாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்துகட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்டசெயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடைவிதிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக) • மத்திய  உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து • திரையரங்குகள் • அனைத்து மதுக்கூடங்கள் • நீச்சல் குளங்கள் • பொது மக்கள் கலந்து கொள்ளும்சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சாரநிகழ்வுகள் • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்  • உயிரியல் பூங்காக்கள் • நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாகதிருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர்.  • இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர். …

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும்ஒரு வாரம் நீட்டிப்பு Read More

புலி வால் பிடிக்கும் ஒன்றிய அரசு? பிளவு சிந்தனைக்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 370-ன் மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தும், 35 ஏ பிரிவில் வழங்கப்படிருந்த உரிமைகளையும் 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் பறித்ததை நாடு மறந்துவிடவில்லை. ஒன்றுபட்ட ஜம்மு …

புலி வால் பிடிக்கும் ஒன்றிய அரசு? பிளவு சிந்தனைக்கு கம்யூனிஸ்ட் கண்டனம் Read More

ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்… சசிகலா விளக்கம்

தி வீக், என்ற, ஆங்கில வார இதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் சசிகலா. அதில் ஜெயலலிதா மற்றும் தனக்கு இடையே இருந்த உறவுகள் பற்றி பல்வேறு முக்கிய விஷயங்களை அவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். பேட்டியிலிருந்து சில முக்கிய அம்சங்கள்: போயஸ் கார்டனிலிருந்து …

ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்… சசிகலா விளக்கம் Read More

பெட்ரோல் விலையுர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல்,  டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – “ஏணிப் போராட்டம்” இன்று (10.07.2021)  நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் …

பெட்ரோல் விலையுர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் Read More

அமைச்சர் எம்.ஆர்.கே. பண்ணீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

சென்னை, ஜூலை. 10- தலைமைச் செயலகத்தில் வேளாண்மை துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பண்ணீர்செல்வம் தலைமயில் நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி இ.ஆ.ப., வேளாண்துறை இயக்குனர் அண்ணாதுரை இ.ஆ.ப., தோட்டக்கலை …

அமைச்சர் எம்.ஆர்.கே. பண்ணீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! Read More

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

மத்திய இணையமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராக பணியாற்றி வந்தஎல்.முருகனுக்குபுதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தில் மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அவர் தகவல் …

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் Read More

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்! ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். காலியாக இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் புதிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டடுள்ளனர். இது குறித்து …

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்! ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு Read More

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினமாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளைஉரிய காலத்தில் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான இத்துறையின்தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்அவர்கள் இன்று (8.7.2021) தலைமைச் செயலகத்தில்ஆலோசனை நடத்தினார். ​இக்கூட்டத்தில், பல்வேறு அரசுத்துறைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களைக் கண்டறிந்து, விரைந்து நிரப்பிட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான Post Matric மற்றும் Pre Matric கல்வி உதவித்தொகை, உயர்கல்விசிறப்பு உதவித்தொகை, முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை ஆகிய கல்விஉதவித்தொகைத் திட்டங்களை எவ்விதத் தொய்வுமின்றி உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர்  அறிவுறுத்தினார். மேலும், வெளிநாடுகளில் சென்று முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கானகல்வி உதவித்தொகைத் திட்டத்தினைச் சீரமைத்திடஉரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். ​வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ளபயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கிட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினர்துணைத் திட்டங்களின்கீழ்ச் செயல்படுத்தப்படும்திட்டங்களின் பயன் உரிய பயனாளிகளைச்சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டும் என்றும்மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார். ​ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உரிய முறையில் அமல்படுத்ப்ப. டுவதைக் கண்காணிக்க வேண்டும்எனவும், இச்சட்டத்தின் கீழ் தொடரப்படும்வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் வலியுறுத்தினார்.  ​ ​ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் செயல்படுத்தப்பட்டு வரும. அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் ஆய்வுசெய்ததோடு, கூடுதலாக வசதிகள் தேவைப்படும்குடியிருப்புகளைக் கண்டறிந்துஅக்குடியிருப்புகளுக்கு அனைத்து அடிப்படைஉட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கிடவேண்டும்என்றும் கேட்டுக் கொண்டார்.  ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமிநிலங்கள், ஆதிதிராவிடர் அல்லாத பிறஇனத்தவர்களிடம் இருப்பதைக் கண்டறிந்து,  அவற்றை மீட்டு, ஆதிதிராவிடர்களிடமே திரும்பஒப்படைக்கும் பணியை விரைந்து செயல்படுத்துமாறுமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். ​வறிய நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதாரமுன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம்செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்கள், பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வுசெய்தமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், துரித மின்இணைப்புத் திட்டத்திற்கான வைப்புத் தொகையினைஉயர்த்திட உரிய நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியம், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நலவாரியம்,  தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியம், தமிழ்நாடுபழங்குடியினர் ஆன்றோர் மன்றம், மாநிலஆதிதிராவிடர் நலக்குழு ஆகியவற்றின் செயல்பாடுகள்குறித்தும் விவாதிக்கப்பட்டது.  ​இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகுஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர்முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.,  நிதித்துறைக்கூடுதல் தலைமைச் செயலாளர்  ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச்செயலாளர் எஸ். பழனிசாமி, இ.ஆ.ப.,  ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் எஸ். மதுமதி, இ.ஆ.ப.,  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், இ.ஆ.ப., சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின்கூடுதல் காவல்துறை இயக்குநர் எச்.எம். ஜெயராம், இ.கா.ப.,   பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.வி.சி.ராகுல், இ.வ.ப.,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினமாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளைஉரிய காலத்தில் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் அறிவுரை Read More

கே.பாலசந்தர் பிறந்த நாள் விழா

திரு பாலசந்தருடன் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் மேடையில் பயணித்த பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். பங்கேற்க இருக்கும் பிரபலங்கள் – (Alphabetical order) – அஜயன் பாலா (எழுத்தாளர்), ஏ ஆர் முருகதாஸ் (இயக்குனர்),  கே பாக்யராஜ் (நடிகர் …

கே.பாலசந்தர் பிறந்த நாள் விழா Read More