பாதிரியார் ஸ்டான் சாமி மரணம்: பாஜகவின் அரசப் பயங்கரவாதம் – திருமாவளவன்

பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான் சாமி உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. இதை கொரோனா மரணமாகக் கருதமுடியாது. மாறாக, பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசின் இந்த ‘சட்டம்சார் …

பாதிரியார் ஸ்டான் சாமி மரணம்: பாஜகவின் அரசப் பயங்கரவாதம் – திருமாவளவன் Read More

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிர்வாகிகள்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்குழு தலைவர் – சேலம் புறநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளரும் – எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான சி.செல்லதுரை, எம்.ஏ., பி.எல்.., அவர்கள் தலைமையில், பி.எஸ்.ராமசாமி,       Ex.சேலம் புறநகர் மாவட்ட பொருளாளர் – எம்.கண்ணன்,BA.      சேலம் புறநகர் மாவட்ட …

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிர்வாகிகள். Read More

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முதல்வரிடம் முறையீடு

நடிகர் கார்த்தி, நடிகை மற்றும் இயக்குநர் ரோஹினி, தயாரிப்பாளர் தேண்டாண்டாள் முரளி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், தயாரிப்பாளர் 2D ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் உள்ளிட்டோர் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலக்த்தில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத் …

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முதல்வரிடம் முறையீடு Read More

படித்த இளைஞர்களை தொழிலதிபர்களாக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் அறியுறுத்தல்

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்படும்  பல்வேறு திட்டங்கள் …

படித்த இளைஞர்களை தொழிலதிபர்களாக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் அறியுறுத்தல் Read More

சைக்கிளில் பிரேமலதா விஜயகாந்த்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சைக்கிள் ஓட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.  

சைக்கிளில் பிரேமலதா விஜயகாந்த் Read More

ஸ்டாலின் நடவடிக்கையால் அதிமுக அதிர்ந்து போயுள்ளது.

ஸ்டாலின் சமீபத்தில் டெல்லி சென்றபோதுகூட, இந்த விவகாரத்தை பற்றிதான் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது. அதற்கு டெல்லி மேலிடமும் ஓகே சொல்லி உள்ளது. இதற்கு பிறகுதான், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமியிடம், கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகள் தொடர்பான …

ஸ்டாலின் நடவடிக்கையால் அதிமுக அதிர்ந்து போயுள்ளது. Read More

கருத்து சொன்னால் பகிரங்கமாக மிரட்டுவதா? பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

அண்மையில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 என்பது நேரடியாக படைப்பாளிகள் மீதும், திரைப்படம் உள்ளிட்ட ஒளிப்பதிவு படைப்புகளின் மீதும் கொண்டு வரப்பட்டுள்ள நேரடியான தாக்குதலாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல படைப்பாளிகளும், அறிஞர்களும் …

கருத்து சொன்னால் பகிரங்கமாக மிரட்டுவதா? பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் Read More

தளர்வுகள் தரப்பட்டுவிட்டது என்று சொல்லி விதிமுறைகளை மீறி நடக்க கூடாதென்கிறார் முதல்வர் ஸ்டாலின்

அன்பார்ந்த மக்கள் அனைவருக்கும் வணக்கம்! கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மீண்டுவருகிறோம். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது.இந்தப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசால்அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விதிகளை முழுமையாகக்கடைப்பிடித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் எனதுநெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை, தங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியமருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்தநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாள் ஒன்றுக்கு 36 ஆயிரத்தைத் தொட்ட தொற்றுப் பாதிப்பானது இப்போது 4 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு – மருத்துவர்களின் அர்ப்பணிப்பு – மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு – துடிப்பான நிர்வாகம்ஆகிய நான்கின் காரணமாகவும்தான் இந்தளவுக்கு நாம்வெற்றியைப் பெற முடிந்தது. இன்றைய தகவல்களின்அடிப்படையில் ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில்இருக்கின்றன. ஆக்சிஜன் படுக்கைகளாக இருந்தாலும் – தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளாக இருந்தாலும்ஏராளமாக உள்ளன. எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்குஉண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டுஎன்பதை நானும் அறிவேன்! நான் இப்போது நாட்டு மக்களிடம் சொல்ல விரும்புவதுஒன்றே ஒன்றுதான் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம்என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும்அலட்சியமாக இருந்து விடக்கூடாது. தளர்வுகள் அறிவித்துவிட்டார்கள் – அதனால் நாம் எந்தவிதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று யாரும்நினைக்கக் கூடாது. இன்னமும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அரசியல் மற்றும் சமுதாய விழாக்கள்அனுமதிக்கப்படவில்லை. திரையரங்குகளைத்திறக்கவில்லை. பூங்காக்கள் திறக்கவில்லை. ஏனென்றால்இவை எல்லாம் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள்.இப்படித் திறக்காமல் இருக்கிறோம் என்றால், ஏன் என்றகாரணத்தை உணர்ந்து மக்கள் எச்சரிக்கை உணர்வுடன்இருக்க வேண்டும். உணவகம், கடைகள் மற்ற முக்கிய சேவைகள், பொதுப்போக்குவரத்து, அரசு மற்றும் தனியார்அலுவலகங்களுக்கு அனுமதி தருவதற்குக் காரணம், மக்களின் வாழ்வாதாரத்தின் மீது உள்ள அக்கறையால்தான். முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம்பாதிக்கப்படுகிறது, அவசியமான பொருள்களைக் கூடவாங்குவதில் சிரமம் இருக்கிறது, அதேபோல் மாநிலத்தில்பொருளாதாரமும் சுணக்கம் அடைகிறது – ஆகிய மூன்றுகாரணங்களால்தான் பல்வேறு தளர்வுகளை அறிவித்தோம். இந்த தளர்வுகளுக்கு உள்ளார்ந்த பொருள் இதுதான்.அதனைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரியஆயுதமும் கேடயமும் ஆகும். தமிழ்நாட்டு மக்கள்அனைவருக்கும் முழுமையாக நாம் இன்னும் தடுப்பூசிபோட்டு முடிக்கவில்லை. ஒன்றிய அரசால் நமக்குவழங்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுள்ளோம். அவர்களும்முழுமையாக நமக்கு வழங்கவில்லை. பள்ளிப் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுதல் குறித்துஇன்னும் மருத்துவ வல்லுநர்கள் முடிவுகள் எடுக்கவில்லை.குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆலோசனைகள்நடந்துகொண்டு இருக்கின்றன. இப்படி எல்லாத்தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும்.அப்படிச் செலுத்துவதை மக்கள் இயக்கமாகவேமாற்றுவதற்கு அரசு தயாராக இருக்கிறது. முழுமையான அளவுக்குத் தடுப்பூசிகள் கிடைக்காதநிலையில் மக்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன்இருந்தாகவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களுக்கு நான்வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை. மக்கள் அனைவரும்தங்களுக்குத் தாங்களே சுயகட்டுப்பாட்டைவிதித்துக்கொள்ள வேண்டும். தேவைக்கு, அவசியத்தின்காரணமாக மட்டுமே வெளியில் வாருங்கள். அப்படிவரும்போதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப்பின்பற்றுங்கள். * வீட்டை விட்டு வெளியில் வரும் எல்லோரும் முகக்கவசம்அணியுங்கள். * கூட்டமாகக் கூடுவதை தவிர்த்துவிடுங்கள்.  * வரிசையில் நின்று வாங்குங்கள்.  * வரிசையில் நிற்கும்போதும் போதிய தனிமனித இடைவெளியைப் பின்பற்றுங்கள்.  * பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்போதும் – அதிகமான கூட்டம் இருக்கும் இடத்திலும் இரண்டு முகக்கவசங்களைக் கூட பயன்படுத்தலாம்.  * கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினிகொண்டு சுத்தம் செய்யுங்கள்.  * கடைகளில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசங்கள் பயன்படுத்துங்கள்.  * அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பணியாற்றுங்கள்.  * கடைகளின் நுழைவாயில்களில் கை சுத்திகரிப்பானை வையுங்கள். உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் கொண்டு பரிசோதனை செய்யுங்கள்.  * கடைகளுக்குள் ஒரே நேரத்தில் அதிகப்படியானஆட்களை அனுமதிக்க வேண்டாம்.  * நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். நீங்களாகவே தெரிந்த சிகிச்சை முறைகளைச் செய்து கொள்ள வேண்டாம்.  – இவை எல்லாமே மிகமிகச் சாதாரணக் கட்டுப்பாடுகள்தான்.இதனைப் பின்பற்றி நடந்து கொண்டாலே கொரோனாதொற்று ஏற்படாமல் தடுக்கலாம். இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லை. மக்கள் தங்களுக்குத் தாங்களேபோட்டுக்கொள்ளக் கூடிய சுய கட்டுப்பாடுகளாக மாறவேண்டும்.  அந்த அடிப்படையில் ஒவ்வொரு மனிதரும் தங்களுக்குத்தாங்களே காவல் அரணாக இருக்க வேண்டும். தளர்வுகளின்போது கட்டுப்பாட்டு விதிமுறைகளைமீறினால்தான் மூன்றாவது அலை வரக் கூடிய சூழல் எழும்என்கிறார்கள் மருத்துவர்கள். கட்டுப்பாடுகளை நாம்ஒழுங்காகக் கடைப்பிடித்தால் எந்த அலையும் உள்ளே வரமுடியாது. எனவே மக்கள் எல்லாரையும் நான் கேட்டுக் கொள்வது – தளர்வுகள் தரப்பட்டுவிட்டது என்று சொல்லி விதிமுறைகளை மீறி நடக்கவேண்டாம். விதிக்கப்பட்ட விதிமுறைகள் அமலில்தான் உள்ளன. விதிமுறைகளைப் பின்பற்றி நம்முடைய மதியால்கொரோனாவை வெல்வோம்.

தளர்வுகள் தரப்பட்டுவிட்டது என்று சொல்லி விதிமுறைகளை மீறி நடக்க கூடாதென்கிறார் முதல்வர் ஸ்டாலின் Read More

கோடநாடு எஸ்டேட்டை ஏலம் விடுமா தமிழக அரசு?:* ரூ.1,000 கோடி அரசு கஜானாவில் சேர வாய்ப்பு.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த வார்த்தை மக்களால் நான்…… மக்களுக்காகவே நான். இந்த வார்த்தைகளை நம்பித்தான், அவரை தொடர்ச்சி யாக இரண்டாம் முறையாக ஆட்சிப்பீடத்தில் அமர வைத்தனர் தமிழக மக்கள்.அவர் ஆறே மாதங்களில் விட்டுச் …

கோடநாடு எஸ்டேட்டை ஏலம் விடுமா தமிழக அரசு?:* ரூ.1,000 கோடி அரசு கஜானாவில் சேர வாய்ப்பு. Read More

பத்திரிகையாளர்கள் நலனுக்காக பிரபல நட்சத்திரங்கள் ஆடி பாடிய புதிய இசை ஆல்பம் விரைவில் வெளியீடு

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்(TMJA) பல ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. கொரானா வைரஸ் காலங்களில் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு, அடிப்படைத் தேவைகளில் எந்த குறைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், திரைப் பிரபலங்களான அஜித் சிவகார்த்திகேயன், …

பத்திரிகையாளர்கள் நலனுக்காக பிரபல நட்சத்திரங்கள் ஆடி பாடிய புதிய இசை ஆல்பம் விரைவில் வெளியீடு Read More