தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் என்று இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரைகூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’  இப்படத்தின் டீசர் மற்றும் …

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை Read More

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகியதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 16.9.2021 அன்று தலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக,இந்து சமய அறநிலையத் துறை சார்பில்திருச்செந்தூர்– அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில், சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில்நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைதுவக்கி வைத்தார். இறையருள் பெற திருக்கோயில்களுக்குவருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதேஅன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில்754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம்வழங்கப்பட்டு வருகிறது. முந்தையகாலகட்டங்களிலும் திருக்கோயில்கள் மூலம்ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்துவந்துள்ளது. இதனைப் பின்பற்றி கொரோனாபெருந்தொற்று காலத்தில், ஏழை எளிய மக்களின்பசியினை போக்கும் விதமாக திருக்கோயில்கள்சார்பாக 44 இலட்சம் பேருக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம்மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமானமுறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட,இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல்ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்துமுதுநிலை திருக்கோயில்களிலும் பெறப்பட்டுள்ளது.  தற்போது, பழநி – அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், திருவரங்கம் – அருள்மிகுஅரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டுதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு, திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் 4.9.2021 அன்று இந்து சமயஅறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில்திருச்செந்தூர் – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில், சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்றுதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட அன்னதானத்திட்டத்தின் வாயிலாக இம்மூன்று திருக்கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத்திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும்.       இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே. சேகர்பாபு, சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர்முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளிமாவட்ட ஆட்சித் தலைவர்  சு. சிவராசு, இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்  டாக்டர் கே. செந்தில்ராஜ், இ.ஆ.ப., திருவள்ளூர்மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகியதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் Read More

வெளிநாட்டு அஞ்சலில் வந்த உயிருள்ள 10 அரியவகைசிலந்திகள் சென்னையில் பறிமுதல்

வெளிநாட்டு அஞ்சல் அலுவலகத்தில் போலந்து நாட்டில்இருந்து வந்திருந்த  பார்சல் ஒன்றில் ஒட்டுண்ணி வகைஉயிரினம் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்அடிப்படையில் அதனை சென்னை விமான நிலையசுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தகஜுலகா என்பவருக்கு அந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. அதனைப் பிரித்து பார்க்கையில், தெர்மாகோல் பெட்டிஒன்றில் 10 சிறிய நெகிழிக் குப்பிகள்  பருத்தி மற்றும்வெள்ளிக் காகிதத்தில் சுற்றப்பட்டு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.  அதனை மேலும் சோதனையிட்டதில் ஒவ்வொருகுப்பிக்குள்ளும் உயிருள்ள 10 அரியவகை சிலந்திகள்இருப்பது தெரியவந்தது. சிலந்திகளை சோதனையிட்டவிலங்கு தனிமைப்படுத்தல் அதிகாரிகள், அவை இறக்குமதிசட்டத்திற்கு புறம்பானது என்பதாலும், வெளிநாட்டு வர்த்தகஉரிமம் மற்றும் இதர ஆவணங்கள் இல்லை என்பதாலும், சிலந்திகளை அவை எந்த நாட்டிலிருந்து வந்தனவோ, அங்கேயே அனுப்பி வைக்குமாறு  பரிந்துரைத்தனர். சுங்கச் சட்டம் 1962-ன் படி சிலந்திகள் பறிமுதல்செய்யப்பட்டன. பின்னர் சிலந்திகள் அடங்கிய பார்சல்போலந்திற்கு திருப்பி  அனுப்பப்படுவதற்காக தபால்அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மதிப்பீட்டுதுறை பல்வேறு போதைப் பொருட்கள் அடங்கியபொட்டலங்களையும் கண்டறிந்துள்ளது. 274 கிராம் கஞ்சாஅடங்கிய 3 பார்சல்கள், எம்டிஎம்ஏ மாத்திரைகள், மெதாம்ஃபெடமைன், அம்ஃபெடமைன், சராஸ் உள்ளிட்ட 92 கிராம் எடை கொண்ட போதை பொருட்கள் அடங்கிய 5 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இந்த பார்சல்கள்போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாக சென்னைசர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அஞ்சலில் வந்த உயிருள்ள 10 அரியவகைசிலந்திகள் சென்னையில் பறிமுதல் Read More

விடியா’ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் கூறுகிறார் இ.பி.எஸ்

“கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம்.  வளர்ச்சிக்கு அறிகுறி அது.  நாம் மக்கள், வன விலங்குகள் அல்ல.  இது நாடு, காடு அல்ல.  காட்டு முறையைக் கையாண்டால் அதற்குப் பெயர் ஜனநாயகமாகாது; பாசிச முறை அது’’ என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் …

விடியா’ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் கூறுகிறார் இ.பி.எஸ் Read More

கருணைக்கொலை செய்யக்கோரி மூத்திரப்பையுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த முதியவர்..

கருணைக் கொலை செய்யக்கோரி மாற்றுத் திறனாளி மகளுடன் முதியவர் கையில் முத்திரப் பையை சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.  திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே அணலை கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை (81). இவருக்கு தவசுமணி, லட்சுமி என்ற, 2 …

கருணைக்கொலை செய்யக்கோரி மூத்திரப்பையுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த முதியவர்.. Read More

ஜெய் நடிக்கும் எண்ணித் துணிக டீசர் 1 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்து வருகிறது

விநாயகர் சதுர்த்தி திருநாளில் வெளியான, ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள  “எண்ணித் துணிக” படத்தின் டீசர், YouTube தளத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பானது, ரசிகர்களிடையேயும், விநியோக தளத்திலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு …

ஜெய் நடிக்கும் எண்ணித் துணிக டீசர் 1 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்து வருகிறது Read More

பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் நகைச்சுவை நிறைந்த வாழ்வியல் திரைப்படம்.

இயக்குனர்  பா.இரஞ்சித்திடம் இணை இயக்குனராக கபாலி காலா போன்ற படங்களில் பணியாற்றியவர் தினகரன் சிவலிங்கம். சமகால தமிழக சூழலில் இருக்கும் முக்கிய பிரச்சினையை மையமாகக்கொண்டு நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இந்த  படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை பா.இரஞ்சித், மற்றும் மெட்ராஸ் படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்ட போஸ்டர் …

பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் நகைச்சுவை நிறைந்த வாழ்வியல் திரைப்படம். Read More

திமுக குடும்பத் திருமண விழா

சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்கு பகுதி அவைத் தலைவர் திரு வெங்கடேசன் அவர்களின் இல்ல திருமண விழா திருவண்ணாமலை தானிப்பாடியில் நடைபெற்றது. விழாவில் திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி.எஸ்.முருகன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்… உடன் ஆர்.கே.நகர் சட்டமன்ற …

திமுக குடும்பத் திருமண விழா Read More

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டுமென முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்

நேற்று (15-09-2021) மாலை, சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதுபோது, முரசொலி செல்வம் எழுதிய ‘முரசொலி சில நினைவலைகள்’ புத்தகத்தையும் வெளியிட்டார். இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் …

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டுமென முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார் Read More

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள்ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹைபோடோன்ட்வகை சுறா மீனின் பற்கள் ராஜஸ்தான் மாநிலம்ஜெய்பூரில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மேற்கு மண்டலத்தில் இந்திய புவியியல் ஆய்வுநிறுவனத்தைச் சேர்ந்த  கிருஷ்ணகுமார், பிரக்யாபாண்டே, த்ரிபர்னா கோஷ், டெபாசிட் பட்டாச்சாரியாஆகிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இதனைக்கண்டறிந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மர் பகுதியிலிருந்துஜுராசிக் பாறாங்கற்களில் (ஏறத்தாழ 160-168 மில்லியன்ஆண்டுகள் பழமை வாய்ந்த) முதன்முறையாகஹைபோடோன்ட் வகை சுறா மீன்கண்டறியப்பட்டிருப்பதாக மூத்த புவியியல் ஆய்வுஅதிகாரி திரு கிருஷ்ண குமார் கூறினார். தற்போதுஅழிந்திருக்கும் இந்த வகை சுறா மீன்கள், ஜுராசிக்மற்றும் அதற்கு முந்தைய காலத்தில் கடல் மற்றும்நதிகளில் பெரும்பாலும் காணப்பட்ட மீன் வகை ஆகும். எனினும் ஜுராசிக் காலத்தின் மத்தியில் இந்த வகை சுறாமீன்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி, சுமார் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இவை முழுவதும்அழிந்தன.  ஜெய்சல்மரில்  புதிதாக கண்டறியப்பட்டுள்ள பற்கள், ஸ்ட்ரோஃபோடஸ் ஜெய்சல்மரென்சிஸ் என்ற புதியஉயிரினத்திற்கு சொந்தமானது என்று ஆராய்ச்சிகுழுவினர் தெரிவிக்கின்றனர்.‌ இந்த உயிரினம் இந்தியத்துணை கண்டத்தில் முதன்முறையாககண்டறியப்பட்டிருப்பதுடன், ஆசியாவில் ஜப்பான், தாய்லாந்தைத் தொடர்ந்து இது மூன்றாவதுகண்டுபிடிப்பாகும். ஜுராசிக் காலத்தியமுதுகெலும்புடைய புதைபடிவங்கள் குறித்தஆராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமைல்கல்லாக அமைந்துள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள்ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு Read More