‘இராயப்பேட்டை’ காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு!

சென்னை, ஜூலை. 25: இராயப்பேட்டை காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆலந்தூர் பெரோஸ் கான், பட்டினம்பாக்கம் செந்தில் வேல், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், இராயப்பேட்டை ராஜா அப்துல்லா, தங்கம் …

‘இராயப்பேட்டை’ காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு! Read More

இயந்திர பாதிப்புகளை தானே சரிசெய்து கொள்ளும் பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

விண்கலங்கள் போன்றவற்றில் உள்ள பழுதடைந்த மின்னணு உபகரணங்கள் தங்களை தாங்களே சரிசெய்து கொள்ள வைக்கும் புதிய பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் இயந்திர பாதிப்பின் காரணமாக அவ்வப்போது செயலிழந்து, அவற்றை நாம் செப்பனிடவோ, மாற்றவோ வைக்கின்றன. …

இயந்திர பாதிப்புகளை தானே சரிசெய்து கொள்ளும் பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் Read More

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு

பளுதூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 87கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ என மொத்தம் 202 கிலோ எடையை அவர் தூக்கினார். மணிப்பூரைச் சேர்ந்த 26 வயதான …

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு Read More

சென்னை பெருநகர காவல்துறையில்பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள் அறிவுரைப்படி, சென்னைபெருநகர காவல்துறையில் கொரோனா நோய் தொற்றுகாலத்தில் அர்ப்பணிப்புடன் தன்னுயிரை பொருட்படுத்தாமல்பணியாற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பல்வேறு நலத்திட்டங்கள்நடைமுறைபடுத்தப்பட்டு, முகக்கவசங்கள், திரவசுத்திகரிப்பான், கையுறை உள்ளிட்ட கொரோனா தடுப்புஉபகரணங்கள் வழங்கியும், , கொரோனா பரவாமல் தடுக்ககொரோனா விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்கள்நடத்தப்பட்டும் வரப்படுகிறது.   ​அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுபெங்களூரில் இயங்கி வரும் Sillicon Valley Bank (SVB) நிர்வாகத்தினர், கொரோனா தொற்று காலத்தில் மிகுந்தஅர்ப்பணிப்புடன் களப்பணியாற்றி வரும் சென்னை பெருநகரகாவலில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர் மற்றும் அவரதுகுடும்பத்தினருக்கு N95 முகக்கவசங்கள், கையுறைகள், திரவசுத்திகிரிப்பான், ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளிட்டரூ.3,000/- மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்கள்வழங்க முன் வந்தனர். ​அதன் தொடக்கமாக, இன்று (24.7.2021), காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5,000 காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கியதொகுப்பு வழங்குவதின் அடையாளமாக சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்,15 காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குடாக்டர்.கலாநிதி வீராசாமி, வட சென்னை பாராளுமன்றஉறுப்பினர் மற்றும் Sillicon Valley வங்கியின் இந்தியமனிதவள இயக்குநர் திருமதி.ஷாலினி பொடார்முன்னிலையில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கியதொகுப்பினை வழங்கினார்கள்..  ​உடன், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்(தலைமையிடம்) முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்) திரு.மகேந்திரன், மேற்படிதனியார் வங்கி அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள்கலந்து கொண்டனர்.

சென்னை பெருநகர காவல்துறையில்பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். Read More

கூவம் ஆற்றில் குதித்த நபரை காப்பாற்றிய காவலரை ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்

1. கண்ணகிநகர் பகுதியில் உறங்கி கொண்டிருந்த அரசுபேருந்து நடத்துநரின் பையை திருடிக் கொண்டுஇருசக்கர வாகனத்தில் தப்பிய குற்றவாளியை மடக்கிப்பிடித்து, நடத்துநரின் பை மற்றும் இருசக்கர வாகனம்பறிமுதல் செய்யப்பட்டது. J-11 கண்ணகிநகர் காவல் நிலைய தலைமைக் காவலர்திரு.ஶ்ரீராமதுரை (த.கா.36425) மற்றும் ஊர்காவல்படை வீரர்திருஹரிபிரசாத் (HG5724) ஆகியோர் 12.7.2021 அன்றுஜிப்சி ரோந்து வாகனத்தில் இரவு பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 03.00 மணியளவில் (13.7.2021), ஒக்கியம்துரைப்பாக்கம், OMR சர்விஸ் சாலை, பெட்ரோல் பங்க்அருகில் சுற்றுக் காவல் மேற்கொண்டபோது, அவ்வழியேஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் காவல் வாகனத்தை பார்த்ததும், இருசக்கர வாகனத்தை திருப்பிதப்ப முயன்றபோது, காவல் குழுவினர் சத்தம் போடவே, 3 நபர்களும் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு ஓடினர். காவல் குழுவினர் துரத்திச் சென்று 3 நபர்களில் ஒருவரைபிடிக்க, மற்ற 2 நபர்கள் இருட்டில் ஓடி மறைந்துவிட்டனர். பிடிபட்ட நபரை விசாரணை செய்தபோது, அவரதுபெயர், தனுஷ், வ/18, த/பெ.சீனிவாசன், கண்ணகிநகர்குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, சென்னை என்பதும், தனுஷ் தப்பிச் சென்ற அவரது நண்பர்கள் குள்ளாபாய் (எ) சாகுல் அமீது மற்றும் தீனா ஆகியோருடன் சேர்ந்து, சற்றுமுன்பு காரபாக்கம் பேருந்து நிலையம் அருகே உறங்கிகொண்டிருந்த அரசு பேருந்து நடத்துனரின் செல்போன்மற்றும் ஆவணங்கள் இருந்த பையை திருடிக் கொண்டுஇருசக்கர வாகனத்தில் வரும்போது பிடிபட்டதும்தெரியவந்தது.  அதன்பேரில், பிடிபட்ட தனுஷ், கைப்பற்றப்பட்டஇருசக்கர வாகனம் மற்றும் பேரந்து நடத்துநரின் பைஆகியவற்றுடன் J-11 கண்ணகிநகர் காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின்னர் எதிரி தனுஷ்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்டநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது. மேலும், தப்பிச் சென்ற 2 நபர்களைபிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். 2. கீழ்பாக்கம் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டிசெல்போனை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில்தப்பிய 3 குற்றவாளிகள் கைது– 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் G-3 கீழ்பாக்கம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர்திரு.ரெஜின் (மு.நி.கா.29043) என்பவர் 12.7.2021 அன்றுஇரவு ரோந்து பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் டெய்லர்ஸ்சாலை சந்திப்பு அருகே வரும்போது, கார்த்திக் என்பவர்சற்று முன்பு இவ்வழியே சென்றபோது, இருசக்கரவாகனத்தில் வந்த 3 நபர்கள் தன்னிடம் கத்தியைக் காட்டிமிரட்டி தனது செல்போனை பறித்துச் சென்றதாக காவலர்ரெஜினிடம் கூறினார். காவலர் ரெஜின் குற்றவாளிகளின்அடையாளங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தின் பதிவெண்மற்றும் அடையாளங்களை கேட்டறிந்து, இரவு ரோந்துபணியிலிருந்த தலைமைக் காவலர் பென் அரவிந்த் சாம்(த.கா.27873) மற்றும் முதல்நிலைக் காவலர்திரு.திருக்குமரன் (மு.நி.கா.40048) ஆகியோரை சம்பவஇடத்திற்கு வரவழைத்து, விசாரணை செய்து கீழ்பாக்கம்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 3 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.ஆதிபகவான் (எ) தாஸ், வ/24, த/பெ.சேட்டு, சென்டிரல் இரயில் நிலையபிளாட்பாரம், 2.ராஜேஷ் (எ) கோவிந்தா, வ/19, காமராஜர்தெரு, நியூ காலனி, கோயம்பேடு, 3.திவாகர் (எ) கருப்பு, வ/24, த/பெ.அந்தோணிசாமி, நேரு நகர் நியூ காலனி, கோயம்பேடு என்பதும், சற்று முன்பு மூவரும் சேர்ந்து ஒருஇருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வரும் வழியில்கீழ்பாக்கம் பகுதியில் கார்த்திக்கிடம் கத்தியைக் காட்டிமிரட்டி செல்போன் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அதன்பேரில், அவர்களிடம் இருந்து கார்த்திக்கின்செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல்செய்து, பிடிபட்ட 3 குற்றவாளிகளையும் G-3 கீழ்பாக்கம்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப்பின்னர் 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்குஉட்படுத்தப்பட்டனர். 3. நேப்பியர் பாலத்திலிருந்து கூவம் நதியில் குதித்துசேற்றில் சிக்சி தவித்த நபரை மீட்ட தமிழ்நாடு சிறப்புகாவல்படை காவலருக்கு பாராட்டு. ஆவடி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 5வது அணியில்பணிபுரிந்து வரும் காவலர் சாமிநாதன் (நாயக் எண்.7737), 22.7.2021 அன்று மதியம் சுமார் 01.45 மணியளவில், பணிநிமித்தமாக சென்னையிலுள்ள சீருடை பணியாளர்தேர்வாணையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில்நேப்பியர் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பொதுமக்கள் கூவம் ஆற்றை பார்த்தவாறு கூடியிருந்தனர்.  உடனே காவலர் சாமிநாதன் தனது இருசக்கர வாகனத்தைஓரமாக நிறுத்திவிட்டு சென்றபோது, ஒரு ஆண் நபர்நேப்பியர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்து, மார்பளவு வரையுள்ள சேற்றில் சிக்கி நகர முடியாமல்தவித்துக் கொண்டிருந்தார். உடனே, சாமிநாதன் அந்தசமயம் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்தகயிற்றை எடுத்து ஒரு முனையை பாலத்தில் கட்டி, மற்றொருமுனையில் சுருக்கு போட்டு கயிற்றை இறக்கி, பாலத்தின்பக்கவாட்டில் உள்ள கூவம் ஆற்றின் சேற்றில் சென்றுகயிற்றை அந்த நபரின் உடம்பில் மாட்டி,  பொதுமக்கள்உதவியுடன் கயிற்றை மேலே இழுத்து அந்த நபரைகாப்பாற்றினார். சேற்றுடன் மீட்கப்பட்ட நபரை பொதுமக்கள்உதவியுடன் தண்ணீர் ஊற்றி கழுவி இளைப்பாற்றிவிசாரணை செய்ததில், அவரது பெயர் கமலகண்ணன், …

கூவம் ஆற்றில் குதித்த நபரை காப்பாற்றிய காவலரை ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார் Read More

பண்ருட்டி தொகுதியில் ரூ.கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வேல்முருகன்

பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட 123 பயனாளிகளுக்கு 1,03,72,240/- (ஒரு கோடி மூன்று லட்சத்து எழுப்பதிரெண்ட்டாயிரத்துஇருநூற்று நாற்பது)  ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் வழங்கினார்.. பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, கணவனால் …

பண்ருட்டி தொகுதியில் ரூ.கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வேல்முருகன் Read More

ஜூலை 26ல் நடைபெறும் தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் ஆதரவு

இதுதொடர்பாக SDTU தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முஹமதுஆசாத்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசின் கீழ் இயங்கிவரும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டுவருகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் இத்தகைய நடவடிக்கைக்கு …

ஜூலை 26ல் நடைபெறும் தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் ஆதரவு Read More

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

கொரோனா நோய் தொற்று காரணமான ஊரடங்கினால் பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாலும், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அரசு அறிவுறுத்தியதாலும், ஆட்டோ ஓட்டுனர் தொழிலை நம்பியிருந்த பல லட்சம் பேர் …

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை Read More

எம்.ஜி.ஆர். படத்தை தவறாக சித்தரித்ததிற்கு கண்டனம் – டி.ஜெயக்குமார்

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய சர்பேட்டா படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை …

எம்.ஜி.ஆர். படத்தை தவறாக சித்தரித்ததிற்கு கண்டனம் – டி.ஜெயக்குமார் Read More

வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்ற அப்துல் ரஹ்மானுக்கு; அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

திருநெல்வேலி, ஜூலை. 24: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்று உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மானை, திருநெல்வேலியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, …

வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்ற அப்துல் ரஹ்மானுக்கு; அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! Read More