திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்.

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறையின் கூட்டரங்கில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலினைப் பழமைமாறாமல் புதுப்பித்தல் தொடர்பான பெருந்திட்ட ஆய்வுக்கூட்டம் 17.07.2021 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு,மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும்கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.இராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்றஉறுப்பினர் திருமதி.கனிமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எச்.சி.எல் நிறுவனத்தினால் நியமனம்செய்யப்பட்ட கட்டிடக்கலை வல்லுனர்களால்திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமிதிருக்கோயிலினைப் பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும்பெருந்திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகள்மேற்கொள்ளப்பட்டது. அப்பணிகள் தொடர்பான முதல்கட்டவிளக்கக் காட்சியில் திருக்கோயிலின் கட்டுமானம், பக்தர்களின் அடிப்படை வசதிகள், முக்கிய திருவிழாக்காலங்களில் அதிகப்படியான பக்தர்களைஈர்க்கும் வகையில் மேலாண்மை செய்தல், காற்றோட்டவசதிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள் கலந்தாய்வுசெய்யப்பட்டன. இத்திருக்கோயில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்பல்வேறு பகுதிகளாகப் பிரித்து செயல்பட வேண்டியுள்ளது.குறிப்பாகத் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின்பயன்பாட்டிற்காக அடிப்படை வசதியான குடிநீர் வசதி, கழிவுநீர் மேலாண்மை, மின்னாளுமை, வாகனம் நிறுத்தும்இடங்கள், ஒளியமைப்பு இவைகளை அதிக செலவின்றிதரமானதாக அமைத்தல் மற்றும் மின் சிக்கனத்தையும்கருத்தில் கொள்ளுதல், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபின்னர் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், பக்தர்கள் வரிசையில் ஓய்வெடுப்பதற்கான இடங்களில்கழிப்பறை, குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டஅனைத்து வசதிகள் இப்பெருந்திட்டத்தில் இடம்பெறவேண்டும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோயில் வளாகத்தில் அதிகளவிலான திருமணங்கள்ஒரே நாளில் திருக்கோயிலில் நடைபெறும் போது அவற்றைமேலாண்மை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும், திருக்கோயில் சுற்றுப்புறத்தில்இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார்வாகனங்கள் ஓர் இடத்தில் முறைப்படுத்தப்பட்டு அங்குஇருந்து திருக்கோயிலுக்கு மினி வாகனம் இயக்கப்படவேண்டும் எனவும், திருக்கோயில் சுற்றுப்புறத்தில் வசிக்கும்மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மேற்படிதிட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரைகள்வழங்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை முதன்மைச் செயலாளர், முனைவர்பி.சந்திர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர், ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல்ஆணையர், திரு.கண்ணன், இ.ஆ.ப., திருச்செந்தூர்,அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தக்கார், திரு.கண்ணன், விளாத்திகுளம், சட்டமன்ற உறுப்பினர வி.மார்க்கண்டேயன், எச்.சி.எல் நிறுவன கட்டிடக்கலைவல்லுனர் திருமதி.ஸ்ரீமதி உட்பட பல அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம். Read More

சித்திரை பாண்டியன் இல்லத் திருமண விழா; விக்கிரமராஜா வாழ்த்து!

சென்னை, ஜூலை. 16: தென் சென்னை கிழக்கு மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் மார்கெட் வியாபாரிகள் சங்க பொருளாளர் சி. சித்திரை பாண்டியன், இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து …

சித்திரை பாண்டியன் இல்லத் திருமண விழா; விக்கிரமராஜா வாழ்த்து! Read More

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு!

செங்கல்பட்டு, ஜூலை. 16: சென்னையின் குடிநீர் தேவைக்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் போரூரில் அமையவுள்ள 400 எம்.எல்.டி திறன் கொண்ட …

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு! Read More

குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க; ஆய்வினை மேற்கொண்டார் அமைச்சர் தாமோ. அன்பரசன்!

செங்கல்பட்டு, ஜூலை. 17: ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் அடங்கிய போரூர் ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும், அந்த குப்பைகளை அகற்றுவதற்காகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.பவுடன், …

குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க; ஆய்வினை மேற்கொண்டார் அமைச்சர் தாமோ. அன்பரசன்! Read More

ஆம்பூரில்; எம்.பி., அலுவலகம் திறப்பு!

வேலூர், ஜூலை. 16: வேலூர் மாவட்டம் ஆம்பூரில், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திறந்து வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந் நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்,  குடியாத்தம் …

ஆம்பூரில்; எம்.பி., அலுவலகம் திறப்பு! Read More

கொரோனாத் தடுப்பூசி முகாமை; துவக்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

திருச்சி, ஜூலை. 16: திருவெறும்பூர் தொகுதியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அண்ணா பல்கலைக் கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நடைபெற்ற கொரோனாத் தடுப்பூசி முகாமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைத்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். …

கொரோனாத் தடுப்பூசி முகாமை; துவக்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! Read More

சிப்காட் வளாகத்தில்; ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் காந்தி!

இராணிப்பேட்டை, ஜூலை. 16: இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி, சிப்காட் வளாகத்தில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் TCC கம்பெனி திடக்கழிவுகளை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி, முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். …

சிப்காட் வளாகத்தில்; ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் காந்தி! Read More

இராணிப்பேட்டை தொழிற்மையத்தை; அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்!

இராணிப்பேட்டை, ஜூலை. 16: இராணிப்பேட்டை தொழிற்மையத்தை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன்,  மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாஸ்டன் புஷ்பராஜ் இ.ஆ.ப., ஆற்காடு …

இராணிப்பேட்டை தொழிற்மையத்தை; அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்! Read More

ரூ.8.02 கோடி; அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார்!

காஞ்சிபுரம், ஜூலை. 16: காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ரூ.8.02 கோடி மதிப்பீட்டில் 787 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஊரக தொழித்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், எழிலரசன். …

ரூ.8.02 கோடி; அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார்! Read More

அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

காஞ்சிபுரம், ஜூலை. 15: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நல்லுறவு மையக்கூட்டரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ. வேலு, தலைமையில் ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ. …

அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்! Read More